மகாராஷ்டிரா ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கூட்டுறவு வங்கி லிமிடெட் தனது ஆண்டறிக்கையில், மகாத்மா காந் தியைப் படுகொலை செய்த நாது ராம் கோட்சே-வின் புகைப் படத்தை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023 ஜூன் மாதம் நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கூட்டுறவு வங்கித் தேர்தலில், ஏற்கெனவே உள்ள தொழிற்சங்கங்களைத் தோற்கடித்து, சதாவர்தே தலை மையிலான அரசுப் போக்கு வரத்துக் கஷ்டகாரி ஜனசங்கக் குழு 19 இடங்களில் வெற்றி பெற் றது. தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போதே, சதாவர்தே, மகாத்மா காந்தியை காலாவதியானவர் என்று விமர்சித்தும், கோட்சேவை வெளிப்படையாக புகழ்ந்தும் பேசி வந்தார். இந்நிலையில்தான், வங்கி ஆண்டறிக்கை மலரின் அட்டைப் பக்கத்தில் சதாவர்தே குழு உறுப்பினர்கள், கோட்சே, வி.டி. சாவர்க்கர் மற்றும் டாக்டர் அம் பேத்கர் ஆகியோரின் புகைப் படங்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந் துள்ளன. பாஜக ஆட்சி அமையும் போதெல்லாம் சதாவர்தே போன்ற வர்கள் பலம் பெறுகிறார்கள். உள் துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சதாவர்தே-வை கைது செய்து, மகாராஷ்டிராவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்பதை நிரூபிப்பாரா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி யுள்ளன.