புதுதில்லி, பிப். 18 - “அதானி குழுமத்தின் சரிவு மோடி யின் ஆட்சியை வலுவிழக்கச் செய் யும்; ஒருவகையில், அது இந்தியா வில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என்று அமெரிக்க தொழிலதிபரும், ‘ஒபன் சொசைட்டி அறக்கட்டளை’ தலைவரு மான ஜார்ஜ் சோரஸ் தெரிவித்துள் ளார். ஆர்எஸ்எஸ் - பாஜகவின் செல்லப் பிள்ளையும், அவர்களால் ஊட்டி வளர்க்கப்பட்டவருமான கவுதம் அதானி, பங்குச் சந்தை வர்த்தகத்தில் சுமார் 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் மோசடி, வரி ஏய்ப்பை செய்திருப்பதாக அமெ ரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது சர்வ தேச அளவில் மிகப்பெரிய அதிர்வ லைகளை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி 24 அன்று ஹிண்டன் 155 பில்லியன் டாலர் சொத்து மதிப் புடன் (சுமார் 14 லட்சம் கோடி ரூபாய்) இந்தியா மற்றும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும், உலகின் 3-ஆவது பணக்காரராகவும் அதானி இருந்தார்.
ஆனால், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ வெளியிட்ட 106 பக்கங்களில், 32 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட ஆய்வறிக்கை, கடந்த 2 வாரங்களில் அதானி சாம்ராஜ்யத்தையே சரித்துப் போட்டு விட்டது. கடந்த ஜனவரி 24 முதல் தற்போது வரை அதானி குழுமம் 125 பில்லி யன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளது. அதானி குழு மங்களின் சந்தை மதிப்பு 19 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், அதில் சுமார் 10 லட்சத்து 25 ஆயிரம் கோடியை இழந்துள்ளது. ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை வெளியான பிறகு, அதானி குழு மத்தின் சுமார் 53 சதவிகிதம் அளவிற் கான சந்தை மதிப்பை இழந்துள்ளது. கவுதம் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 2022 டிசம்ப ரில் ரூ. 12 லட்சத்து 40 ஆயிரத்து 353 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது சுமார் ரூ. 4 லட்சத்து 33 ஆயிரத்து 297 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம் ‘போர்ப்ஸ்’ உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 52.4 பில்லி யன் டாலர் சொத்து மதிப்புடன், அதானி 24-ஆவது இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளார்.
ஜனநாயக மறுமலர்ச்சிக்கு வாய்ப்பு ஏற்படும்
இந்த பின்னணியில்தான், ‘மியூ னிச்’ பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்ன தாக ஆற்றிய உரையில், “அதானி குழு மத்தின் சரிவு மோடியின் ஆட்சியை வலுவிழக்கச் செய்யும்; ஒருவகை யில், அது இந்தியாவில் ஜனநாயக மறு மலர்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத் தும்” என்று அமெரிக்க தொழிலபதி ரும், ‘ஒபன் சொசைட்டி அறக் கட்டளை’ தலைவருமான ஜார்ஜ் சோரஸ் தெரிவித்துள்ளார். “மோடியும் அதானியும் மிக நெருக்கமானவர்கள். அவர்கள் இருவ ரது வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. தற்போது அதானி குழுமம் சீட்டுக் கட்டு சரிவதுபோல் சரிந்துள்ளது. ஆனால், இந்த விவ காரத்தில் மோடி அமைதியாக இருக்கி றார். சர்வதேச முதலீட்டாளர்களின் கேள்விக்கு அவர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்தாக வேண்டும். அதானி குழுமத்தின் சரிவு மோடியின் ஆட்சி யை வலுவிழக்கச் செய்யும். ஒருவகை யில், அது இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான வாய்ப்பை ஏற் படுத்தும்” என்று அவர் கூறியுள்ளார்.
உலகளாவிய அளவில் ‘ஜனநாய கம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை’ வளர்த்தெடுக்கும் நோக்கில் ‘ஓபன் சொசைட்டி’ என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் 92 வயது அமெரிக்க தொழிலதிபரான ஜார்ஜ் சோரஸ், “அதானி குழுமத்தின் சரிவானது, இந்தியாவின் கூட்டாட்சி அரசாங் கத்தின் மீதான மோடியின் பிடியை கணிசமாக பலவீனப்படுத்தும்; மிகவும் தேவையான நிறுவன சீர்திருத்தங்க ளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான கத வைத் திறக்கும்” என்று மதிப்பிட்டுள் ளார். மேலும், “நான் அப்பாவியாக இருக்கலாம், ஆனால் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை எதிர் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். “அதானியின் வணிக சாம்ராஜ்ஜி யத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு இந்தியா என்ற நம்பிக்கையை உலுக்கி இருக்கிறது. அதானி குழும சர்ச்சை யில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலளிக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்திய நாடாளுமன்றமும், சர்வதேச முதலீட்டாளர்களும் எழுப்பும் கேள்வி களுக்கு அவர் பதிலளிக்க வேண் டும்” என்றும் ஜார்ஜ் சோரஸ் வலி யுறுத்தியுள்ளார். மேலும், இந்தியா சுவாரசியமான நாடு. இந்தியா ஜனநாயக நாடு ஆனால் அந்நாட்டின் தலைவர் நரேந்திரமோடி ஜனநாயகமானவர் அல்ல” என கூறியிருக்கும் சோரஸ், “இஸ்லாமிய மதத்தினருக்கு எதிரான வன்முறையை தூண்டுதலே நரேந்திர மோடியின் வானளாவிய உயர்வுக்கு முக்கிய காரணம். திறந்த வெளி சமூ கத்துடன் மட்டுமன்றி, நிழலுலக சமு தாயத்துடனும் மோடி நெருக்கமான உறவு கொண்டுள்ளார்” என குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்மிருதிஇராணி பதில்
இந்நிலையில், ஜார்ஜ் சோரஸின் பேச்சு இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். “சோரஸ் தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்துக்காக இந்தியாவின் ஜன நாயகத்தை தகர்க்க விரும்புகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை குறி வைத்து 1 பில்லியன் டாலர் நிதி உதவி அறிவித்துள்ளார். இந்திய அரசு அவ ரது விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து செல்ல வேண்டும் என்று சோரஸ் நினைக்கிறார். இந்தியாவில் தனக்கு சாதகமான நபர்களை ஆட்சியில் அமர வைக்கும் நோக்கில் அவர் செயல்படுகிறார். இங்கிலாந்து வங்கியை சரிவுக்கு தள்ளியதால், அவர் பொருளாதார போர்க் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்டார். இப் போது அவர் இந்தியாவின் ஜனநாய கத்தை அழிக்க முயற்சிக்கிறார். இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கும் இந்தத் தரு ணத்தில் அவர் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். இது இந்தியா மீதான போர். இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட முயற்சி செய்யும் அந்நிய சக்திகளை இந்தி யர்கள் ஒன்றிணைந்து தோற்கடிப் பார்கள். ஜார்ஜ் சோரஸ் போன்று இந்தியாவை சீர்குலைக்க முயற்சி செய்பவர்களை பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எதிர்கொள்வோம்” என்று கொந்தளித்துள்ளார்.