states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

தடுப்பூசி சான்றிதழ்களில் பரவலாக முறைகேடுகள் நடப்பதாக இந்திய மருத்துவ ஊழியர்கள் புகார் கூறுவதாக  கார்டியன் ஏடு அம்பலப்படுத்தியுள்ளது. இது மோடி அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தில் உள்ள மோசடிகள்  குறித்து ஒரு கடுமையான சாடல்! இத்தகைய மோசடிகளை நிறுத்துங்கள். அனைவருக்கும் உண்மையான தடுப்பூசிகள் அளித்து பாதுகாப்பு தாருங்கள்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் உழைப்பாளிகளுக்கு ரூ.3,358 கோடி நிலுவை. அனைத்து நிலுவைகளையும் தந்த பிறகு தற்போதைய நிதி ஒதுக்கீடில் ரூ.54,650 கோடி மட்டுமே மீதம் இருக்கும். பதிவு செய்த உழைப்பாளிகள் அனைவருக்கும் இந்த தொகையை கொண்டு 100 நாட்களுக்கு பதிலாக 16 நாட்கள்தான் பணி தர இயலும். கிராமப்புற உழைப்பாளிகளின் வாழ்வாதாரமாக உள்ள வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி அதிகம் ஒதுக்கீடு செய்யுங்கள்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய பா.ஜ.க.வை தோற்கடிக்க சம்யுக்த கிசான் மோர்ச்சா அறைகூவல் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மக்கள் ஆதரவு பெருகட்டும். சட்டமன்ற தேர்தல்களில் பாஜக-வை தோற்கடியுங்கள்.

வேலையற்ற வாலிபரா? விவசாயியா? தின ஊதிய உழைப்பாளியா? மத்தியதர வர்க்கமா? சிறு/குறு தொழில் முனைவோரா? அனைவரும் மனம் கலங்கி நிற்கிறீர்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சி தரும் அறிவிப்பு. உங்கள் மன வருத்தத்தை போக்க ‘‘டிஜிட்டல் மன ஆலோசனை திட்டம்’’ அமலாக்கப்படும்.