தில்லி, செப்., 10- இந்தியா தலைமையில் நடை பெற்ற ஜி-20 உச்சி மாநாடு ஞாயிறன்று மதியம் நிறைவு பெற்றது. பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள உலகின் 20 நாடுகளைக் கொண்ட “ஜி-20” அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்தியா தலைமையில் தில்லி யில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் சனிக்கிழமையன்று காலை துவங்கியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் என 40 நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்து, விவாதம், ஆலோசனை என பல்வேறு நிகழ்வுகளுடன் ஜி-20 மாநாடு ஞாயிறன்று மதியம் நிறை வடைந்தது. மாநாட்டை நிறைவு செய்து பிரதமர் மோடி உரையாற்றினார். “ஜி-20 கூட்டமைப்பிற்கு இந்தியா வின் தலைமைப் பொறுப்பு நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. மாநா ட்டின் இரு நாட்களில் நீங்கள் நிறைய ஆலோசனைகளை வழங்கினீர்கள். எங்களுக்கு கிடைத்துள்ள ஆலோச னைகளை மீண்டும் ஒரு முறை மீளா ய்வு செய்து அவற்றின் முன்னேற்றத்தை எந்த வகையில் துரிதப்படுத்தலாம் என்பதை பார்ப்பது எங்கள் கடமை யாகும். நவம்பர் மாத இறுதியில் நாங்கள் காணொலி காட்சி மூலம் ஜி-20 கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுக்கி றோம். இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்ட தலைப்புகள் குறித்து நாம் காணொலி காட்சி கூட்டத்தில் ஆலோசிப் போம். நீங்கள் அனைவரும் அந்த கூட்டத் தில் பங்கேற்பீர்கள் என நம்புகிறோம். இத்துடன் ஜி20 உச்சிமாநாடு நிறை வடைகிறது என நான் அறிவிக்கிறேன்” எனக் கூறினார்.
பிரகடனத்திற்கு சீனா ஆதரவு
முன்னதாக மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தில்லி பிரகடனத்திற்கு சீனாவும் ஆதரவு தெரிவித்தது. புவி அரசியலிலிருந்து விலகி நின்று, நமது நாடுகள் பரஸ்பரம் மரியாதையும் ஒத்து ழைப்பும் மேற்கொள்ளும் விதமாக தொடர்ந்து முன்னேறுவோம் என்று சீனா கூறியது.
அடுத்த ஜி-20 மாநாடு பிரேசிலில்!
இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டுக் கான 19-வது உச்சி மாநாடு ஜி-20 தலை மை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக் கப்பட்டது. இந்தியாவிடமிருந்து ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெற்றுக்கொண்ட பின் பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா பேசுகை யில், “சமூக ஒன்றிணைப்பு மற்றும் பட்டி னிக்கு எதிரான போராட்டம், ஆற்றல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி, உலகளாவிய நிர்வாக நிறுவனங் களின் சீர்திருத்தம் ஆகிய 3 முக்கியத்து வங்களை பிரேசில் தலைமையிலான ஜி- 20 கூட்டமைப்பு கொண்டுள்ளது. முக்கியமாக “நியாயமான மற்றும் நிலையான உலகத்தை கட்டமைத்த லே” பிரேசில் தலைமையிலான ஜி-20 கூட்டமைப்பின் பொன்மொழியாகும். பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலக ளாவிய கூட்டணி, காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய அணிதிரட்டல் ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட உள்ளன” எனக் கூறினார்.
170 விருந்தினர்கள் பங்கேற்பு
ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக உலகத் தலைவர்கள் மற்றும் தேசியத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளித்தார். இந்த விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படாததால் கர்நாடகா, இராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் முதலமைச்சர்கள் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அனைத்து நிகழ்வுகளும் நிறை வடைந்த பின்பு ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அவரவர் நாட்டிற்கு சென்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியட்நாமிற்கு சென்றார்.