அமைச்சகம் வாரியாக ஒதுக்கிய நிதி
மத்திய பட்ஜெட்டில் அமைச்சகம் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சகம் – 5,25,166.15 கோடி உள்துறை அமைச்சகம் – ரூ. 1,85,776.55 கோடி தொலை தொடர்பு அமைச்சகம் – ரூ.10,5 06.82 கோடி இரசாயனம் மற்றும் உர அமைச்சகம் – ரூ.1,07,715. 38 கோடி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் – ரூ.1,32,513.62 கோடி ஊரக வளர்ச்சத்துறை அமைச்சகம் – ரூ.1,38,203.63 கோடி ரயில்வே அமைச்சகம் – ரூ. 1,40,367.13 கோடி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் -ரூ. 1,99,107.71 கோடி நுகர்வோர் விவகார அமைச்சகம் உணவு மற்றும் பொது விநியோகம் துறை – ரூ.2,17,684.46 கோடி
பொது சுகாதாரத்துக்கு ரூ.33,800 கோடி நிதி குறைப்பு
வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மருத்துவம், பொது சுகாதாரத் திட்டங்களுக்கான நிதி ரூ.41,011 கோடியாக குறைக்கப்பட்டது. 2020-21 நிதி ஆண்டில் மருத்துவம், பொது சுகாதார திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.74,800 கோடி ஒதுக்கப்பட்டது. இனி கொரோனா தடுப்பூசிக்கு பெருமளவு நிதி தேவையில்லை என்று கூறி நிதி ஒதுக்கீட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார்.
வருமான வரி உச்சவரம்பில் ஏமாற்றம்
மாத சம்பளக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் வருமான வரிச்சலுகையை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் இந்த ஆண்டும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.
ஜி.எஸ்.டி. வரிவசூல் அதிகரிப்பு
இதுவரை இல்லாத வகையில் ஜனவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,40,986 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்சி மற்றும் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளால் ஜி.எஸ்.டி. வரிவசூல் அதிகரித்துள்ளது. பெரும் நிறுவனங்களு க்கான கூடுதல் வரி 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ்போர்ட் விநியோகம்
சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் எலக்ட்ரானிக் சிப் அடங்கிய இ-பாஸ்போர்ட்டுகள் அடுத்த ஆண்டு முதல் விநியோகிக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த வகை இ பாஸ்போர்ட்டுகள் பயோ மெட்ரிக்ஸ், ரேடியோ ஃப்ரீகுவன்சி அடையாளம் ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இயங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். முதன்முதலாக 2019-ல் இந்திய அரசு இ பாஸ்போர்ட் தொடர்பாக அறிவித்தது. சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இ பாஸ்போர்ட்டு கள் விநியோகிக்கப்படும் எனக் கூறியது. இ-பாஸ்போர்ட்டுகளில் தனிநபரின் அத்தனை விவரங்களும் இருக்கும். டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். ஏற்கெனவே அதிகாரிகள் மட்டத்தில் டிப்ளமேட்டிக் இ பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முதன்முதல் இ-பாஸ்போர்ட் 2008ல் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலுக்கு வழங்கப்பட்டது.
வரி செலுத்துவோருக்கு புதிய வசதி
கூடுதல் வரி செலுத்துவோருக்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும். கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் செய்ய புதிய வசதி அறிமுகம் செய்யப்படும். திருத்தப்பட்ட கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சொத்துகளின் வருமானத்திற்கு வரி
பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மெய்நிகர்/டிஜிட்டல் சொத்துகளின் வருமானத்திற்கு 30 சதவீத வரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மெய்நிகர் டிஜிட்டல் சொத்தைப் பரிசாகப் பெற்றால் வாங்குபவருக்கு வரி விதிக்கப்படும்.டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும்.
தேசிய ஓய்வூதிய திட்டம்
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில்(NPS) மாநில அரசு ஊழியர்களின் பங்களிப்புக்கான வரி விலக்கு வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் சொத்துக்களை மாற்றும்போது செலுத்தப்படும் பணம் மீது 1 சதவீதம் TDS விதிக்கப்படும்.
நீண்ட கால சொத்துக்களுக்கு கூடுதல் கட்டணம்
நீண்ட கால மூலதன ஆதாயங்கள் அனைத்து சொத்துக்களுக்கும் 15 சதவீதம் கூடுதல் கட்டணத்திற்கு உட்பட்டது என்றும் தற்போது, இது பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளின் யூனிட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அமைச்சர்தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டை தயாரிக்க உதவிய குழு
நிதி அமைச்சகம், அரசு திட்டமிடல் அமைப்பு, நிதி ஆயோக் மற்றும் பல அமைச்ச கங்கள் இணைந்து மத்திய பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. பட்ஜெட்டை தயாரிக்க பல்வேறு அரசு துறைகள் ஒன்றாக இணைந்து பணியாற்றும். டிவி சோமநாதன், தருண் பஜாஜ், தேபாசிஷ் பாண்டா, அஜய் சேத் மற்றும் துஹின் காந்தா பாண்டே ஆகியோர் இதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
'