states

கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தும் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காத மோடி அரசு!

புதுதில்லி, மார்ச் 25 - சர்வதேசச் சந்தையில் கச்சா எண் ணெய் விலை கடுமையாக குறைந்துவிட்ட போதும், மோடி அரசு பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்காமல், இந்திய மக்களை வஞ்சித்து வருகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1 பேரல் (சுமார் 158 லிட்டர்) 124 டாலரை எட்டியது. அதன் பிறகு கச்சா  எண்ணெய் விலை  தொடர்ந்து குறைந்து வருகிறது.  கடந்த நான்கு மாதங்களாக கச்சா எண் ணெய் விலை 90 டாலருக்கும் கீழேயே உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும்  ஐரோப்பாவில் சில வங்கிகள் திவாலான தை அடுத்து, உலக பொருளாதாரத்தின் ஆரோக்கியம் மற்றும் கவலை அதிகரித்த தால் கடந்த சில வாரங்களாக கச்சா எண் ணெய் விலை கூர்மையான சரிவை சந்தித் துள்ளது. தற்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 70 டாலர் என்ற அளவிற்கு கடும் வீழ்ச்சி அடைந் துள்ளது.

ஏப்ரல் டெலிவரிக்கான மேற்கு டெக் சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெய் 0.96 சதவிகிதம் குறைந்து 70.22 டாலரா கவும், மே டெலிவரிக்கான பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.83 சதவிகிதம் குறைந்து 76.05 டாலராகவும் வர்த்தகம் ஆகிறது. வழக்கமாக, இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலைகள் உயர்த்தப்படும் போ தெல்லாம், சர்வதேச விலை நிலவரங்க ளின் அடிப்படையிலேயே பெட்ரோல் - டீசல் விலை நிர்ணயிக்கப்படுவதாக ஒன்றிய அரசு கூறுவது வழக்கம். ஆனால், சர்வதேசச் சந்தையில் தற் போது கச்சா எண்ணெய் விலை 70 டாலர்  என்ற அளவிற்கு குறைந்தும் கூட, பெட் ரோல் - டீசல் விலையைக் குறைக்காமல் உள்ளது. கடைசியாக 2022 மே 21 அன்று  பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்பட்டது. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 109.5 டாலராக இருந்தது. ஆனால் 2023 மார்ச் 20 அன்று கச்சா எண்ணெய் விலை 70.69 டாலராக குறைந்து விட்டது. சர்வதேசச் சந்தையில் கடந்த 305 நாட்க ளில் மட்டும் கச்சா எண்ணெய் விலை லிட்ட ருக்கு 16 ரூபாய் 70 காசுகள் குறைந்துள் ளது.  ஆனால், அதன் பலன் நுகர்வோ ருக்கு மாற்றப்பட்டால், கலால் வரி குறை க்கப்படாமலேயே பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டின் விலையும் லிட்டருக்கு 16 ரூபாய் 70 காசுகள் குறையும்.

அதுமட்டுமல்ல, தற்போது ரஷ்யா விடமிருந்து மலிவான விலையிலேயே கச்சா எண்ணெய்யை, இந்தியா கொள் முதல் செய்து வருகிறது. அதாவது சர்வ தேசச் சந்தையில் இருக்கும் விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு- அதுவும் டாலர் வர்த்தகத்தில் அல்லாமல் இந்திய ரூபாய் மதிப்பிலேயே கச்சா எண்ணெய் யைக் கொள்முதல் செய்து, அந்நிய செலா வணியையும் வெகுவாக மிச்சப்படுத்தி வருகிறது. இந்த வகையிலும் பெட்ரோல் - டீசல் விலையை மிகப்பெரிய அளவிற்குக் குறைக்க முடியும். ஆனால், தற்போது வரை பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை.  மார்ச் 24 அன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 63 காசுகளாகவும், டீசல் விலை லிட்ட ருக்கு 94 ரூபாய் 24 காசுகளாகவும் விற் பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த தேர்தல்களால் 307-ஆவது நாளாக நீடித்து வருகிறது.  கடந்த 2002 செப்டம்பரிலும் இதே போல, அதற்கு முந்தைய 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை 92 டாலர்கள் என்ற அளவிற்குக் குறைந்தது. அப்போதும் மோடி அரசு விலைகளைக் குறைக்கவில்லை.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமி டெட் (HPCL), பாரத் பெட் ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (BPCL) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்ப  ரேசன் லிமிடெட் (IOCL) போன்ற எண்ணெ ய்யை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இப்போதும் இழப்பிலேயே இயங்குவ தாகவும் அதனால், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார். இப்போதும் அதே காரணம்தான் கூறப்படு கிறது. மறுபுறம் பார்த்தோமேயானால், ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வரும் போது, 2014-15 நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 065 கோடியாக இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஒன்றிய அரசின் வரி வருவாய் 2021-22ல் ரூ. 4 லட்சத்து 92 ஆயிரத்து 303 கோடியாக அதிகரித்தது. இதில் நஷ்டம் எங்கே வந்தது? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை.

கடந்த 2015 - 2017க்கு இடையே, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 46 முதல் 47  டாலர் என்ற அள வில்தான் இருந்தது. இந்த காலகட்டத்தில் பெட்ரோல் மீதான கலால் வரியை 22.9 சதவிகிதமும், டீசல் மீதான கலால் வரியை  68.47 சதவிகிதமும் ஒன்றிய அரசு உயர்த்தியது. இந்த வரிகளை உயர்த்தா மல் இருந்திருந்தால், ஒரு லிட்டர் பெட் ரோல், 50 முதல் 55 ரூபாய்க்கு மக்களுக்கு கிடைத்திருக்கும். அதன் பிறகும், 2019-20-இல் பீப்பாய் கச்சா எண்ணெய் விலை,  60.47 டாலரிலிருந்து 2020-21இல் 44.82  டாலராக குறைந்தது. கொரோனா கால நுகர்வு குறைவு இதற்கு காரணமாக அமைந்தது. ஆனால் அப்போதும் ஒன்றிய அரசு தொடர்ந்து கலால் வரியை மேலும் மேலும் உயர்த்தி, மக்கள் பயன டையாமல் பார்த்துக்கொண் டது. கொரோனா காலத்தில் 2020 மார்ச்சில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 19 ரூபாய் 98 காசுகளாக இருந்தது. இது 2022 பிப்ரவரியில் 32 ரூபாய் 90 காசுகளாக உயர்த்தப்பட்டது. அதாவது கொரோனா காலத்திலும் பெட்ரோல் மீது லிட்டருக்கு 13 ரூபாய் வரி  உயர்த்தப் பட்டது. டீசல் மீது லிட்டருக்கு 16 ரூபாய்  வரி உயர்த்தப்பட்டது. ஒட்டு மொத்த மாக 31 ரூபாய் 80 காசுகள் அளவிற்கு கலால் வரி விதிக்கப்பட்டது.

இதன்காரணமாக, 2014-15 மற்றும் 2021-22ஆம் ஆண்டுக்கு இடையே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்து வந்த வரி  வருவாய் 186 சதவிகிதம் வரை அதிகரித் தது. தனித்தனியாக பார்த்தால், பெட்ரோல் மீதான கலால் வரியை 194 சதவிகிதமும், டீசல் மீதான கலால் வரியை 512 சத விகிதமும் ஒன்றிய அரசு அதிகரித்தது.  கடந்த 2022 மே 21 அன்று பெட் ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகள் என்ற அளவிலும், டீசலுக்கு 7 ரூபாய் என்ற அளவிலும் ஒப்பு க்கு குறைத்தது. அது பெரிய நிவாரண மாக இல்லை. இவ்வாறு கலால் வரி என்ற பெயரில் மக்களிடம் கொள்ளைய டித்த பிறகும் கூட எண்ணெய் நிறுவ னங்கள் நஷ்டத்தில் இருக்கின்றன என்றால், அதற்கு யார் பொறுப்பாக முடியும்?. மீண்டும் மீண்டும் மக்கள் மீதே சுமையை ஏற்றுவதற்கு இதையே ஒரு தந்திரமாகவும் மோடி அரசு கடைப்பிடித்து வருகின்றது. இது அப்பட்டமான பகல் கொள்ளை. மாபெரும் மோசடியன்று வேறில்லை.