பஞ்சாப்: பயணிகள் ரயிலில் தீவிபத்து
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து சகர்சாவுக்கு (பீகார்) பய ணிகள் ரயில் சென்று கொண்டு இருந்தது. இந்த ரயில் சிரிகந்த் அருகே வந்த பொழுது 19ஆவது பெட்டியில் புகை வந்ததை பார்த்த பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ஒரு பெட்டியில் இருந்து புகை வந்ததும் துரிதமாகச் செயல்பட்ட ஊழியர்கள், ரயிலின் பிற பெட்டிகளை அதிலிருந்து துண்டித்துள்ள னர். எனினும், கொழுந்து விட்டு எரிந்த தீ, 3 பெட்டிகள் வரை பரவியது. காயம் அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை. புகை வந்ததும் பெட்டியில் இருந்து வெளியே குதித்த சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் கிடை த்ததும் உடனடியாகச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறி த்து விசாரணை நடைபெற்று வருகிறது.
