states

இந்தியா அடுத்தாண்டு 5 சதவிகித ஜிடிபி-யை எட்டுவதே கஷ்டம்!

புதுதில்லி, டிச. 16 - இந்தியப் பொருளாதாரம் 2023-24 நிதி யாண்டில் 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்டுவதற்கே கஷ்டப்பட வேண்டியது இருக்கும் என்று பொருளாதார வல்லுநரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரு மான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைப்பயணம், தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை யன்று ரகுராம் ராஜனும் இப்பயணத்தில் கலந்து கொண்டார். பின்னர் ராகுல் காந்தி யுடன் இந்தியப் பொருளாதாரம் குறித்து உரையாடினர். அப்போது ரகுராம் ராஜன் கூறியிருப்பதாவது: “இந்தியா மற்றும் உலகப் பொருளா தாரத்திற்கு அடுத்த ஆண்டு கடினமான தாக இருக்கும். முக்கியமான வட்டி விகிதங்க ளின் உயர்வு, ஏற்றுமதிகள் குறைந்து வரும்  நிலையில். அடுத்த ஆண்டில் (2023-24 நிதி யாண்டில்) இந்திய பொருளாதாரம் 5 சதவிகி தம் வளர்ச்சியை எட்டுவதற்கு மிகவும் சிரமப் படும். ஒருவேளை நாம் 5 சதவிகித வளர்ச்சியை அடைந்தால், அது நமது அதிர்ஷ்டம்.  வளர்ச்சியை எந்த மதிப்பீட்டில் அள விடுகிறோம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த ஆண்டு மோசமான காலாண்டை கொண்டிருந்தது. அதன் மதிப்பில் வளர்ச்சியைக் கணக்கிட்டால் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாகவே தெரியும்.  குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டையும் தற்போ தைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

அப்படியே அதனை தலை கீழாக 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டீர்கள் என்றால் வருடத்திற்கு 2 சதவிகிதம் வளர்ச்சி யாக இருக்கும். ஆனால், அது நமக்கு மிகவும் குறைவு. மந்தமான வளர்ச்சிக்கு, கொரோனா பெருந்தொற்றும் ஒரு பகுதியாக இருக்கி றது. பொதுமுடக்கத்திற்கு முன்னர் இந்தியா  மந்தமாக வளர்ந்து வந்தது. அப்போது  வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்க ளைச் செய்வதற்கு நாம் தவறி விட்டோம். தற்போது பொருளாதார ஏற்றத்தாழ்வு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மத்திய மேல்வர்க்கத்தினர் வீட்டில் இருந்த படி வேலை செய்ததால் அவர்களின் வரு மானம் உயர்ந்தது. ஆனால் தொழிற்சாலை களில் வேலை பார்த்தவர்கள் தங்களின் வரு மானத்தை இழந்தனர். இதனால் பொது முடக்கக் காலத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகரித்தது. வசதி படைத்த வர்களுக்கு சிக்கல் இல்லை. கீழ் வர்க்கத்தி னருக்கு ரேசன் மற்றும் பிற பொருட்கள் கிடைத்தன. ஆனால், கீழ் நடுத்தர வர்க்கத்தி னர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். பலர் வேலையிழந்தனர். வேலையில்லாத் திண்டாட் டம் அதிகரித்தது. இப்போது திட்டங்களை வகுப்பவர்கள் இந்த வர்க்கத்தினரை கவனத்தில் கொள்ள வேண்டும்.” இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.