பெங்களூரு, ஜன. 23 - கர்நாடக சட்டப்பேரவைத் தேர்த லின்போது, ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை பணம் தரவுள்ள தாக கர்நாடக மாநில முன்னாள் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி கூறியுள்ளார். கர்நாடகத்தில், வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதிகாரப்பூர்வமான தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளி யாகாவிட்டாலும், ஆளும் பாஜக துவங்கி, பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை துவங்கி விட்டன. வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில்தான், பெலகா வியில் உள்ள சுலேபாவி கிராமத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடந்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏ-வுமான ரமேஷ் ஜர்கிஹோலி, காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி ஹெப்பால்கரை தாக்கிப் பேசியுள்ளார்.
“அவர் (லட்சுமி ஹெப்பால்கர்) பெலகாவி ஊரகத் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பரிசு களை விநியோகிப்பதை நான் காண்கிறேன். இதுவரை சுமார் ரூ. 1,000 மதிப்புள்ள குக்கர், மிக்சி போன்ற சமையலறை உபகரணங் களை அவர் கொடுத்திருக்க வேண்டும். அவர் இன்னொரு பரிசுப் பொருட்களைக் கொடுக்கலாம். அதையெல்லாம் சேர்த்தாலும் ரூ. 3 ஆயிரம்தான் அடக்கம். ஆனால், நாங்கள் உங்களுக்கு ரூ. 6 ஆயிரம் தராவிட்டால் எங்கள் (பாஜக) வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொள் கிறேன்” என்று பகிரங்கமாக கூறி யுள்ளார். ஜர்கிஹோலியின் இந்தப் பேச்சு, கர்நாடக அரசியலில் சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சரின் கருத்து களை தேர்தல் ஆணையம் கவ னத்தில் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள் ளது. “இது பாஜகவின் ஊழலின் எல்லையைக் காட்டுகிறது. தேர்தல் ஆணையம் அல்லது அமலாக்கத் துறை அல்லது வருமானவரித்துறை இதை ஏன் கவனிக்கவில்லை?” என்று காங்கிரஸ் எம்எல்ஏ பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். “ஆபரேஷன் தாமரை ஒரு உண்மை. அவர் அதை ஆமோதிக் கிறார். இரண்டரை லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இது நகைச்சுவையல்ல. இது ஒரு பாஜக தலைவரின் முறைகேடு அல்லவா? பாஜகவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? என்று கேட்டிருக்கும் கார்கே, “‘பாஜக எம்எல்ஏ-க்கள் அனைவரும், 40 சதவிகித ஊழல் செய்து, கட்சியில் பிழைத்து வருகின்றனர். லஞ்சம் கொடுத்து, போதிய தொகையை வசூலித்துள்ளனர். தேர்தலின் போது பாஜக-வும் தற்போது அதையே செய்ய திட்டமிட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் கருத்து களை தேர்தல் ஆணையம் கவ னத்தில் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள் ளது. “இது பாஜகவின் ஊழலின் எல்லையைக் காட்டுகிறது. தேர்தல் ஆணையம் அல்லது அமலாக்கத் துறை அல்லது வருமானவரித்துறை இதை ஏன் கவனிக்கவில்லை?” என்று காங்கிரஸ் எம்எல்ஏ பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். “ஆபரேஷன் தாமரை ஒரு உண்மை. அவர் அதை ஆமோதிக் கிறார். இரண்டரை லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இது நகைச்சுவையல்ல. இது ஒரு பாஜக தலைவரின் முறைகேடு அல்லவா? பாஜகவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? என்று கேட்டிருக்கும் கார்கே, “‘பாஜக எம்எல்ஏ-க்கள் அனைவரும், 40 சதவிகித ஊழல் செய்து, கட்சியில் பிழைத்து வருகின்றனர். லஞ்சம் கொடுத்து, போதிய தொகையை வசூலித்துள்ளனர். தேர்தலின் போது பாஜக-வும் தற்போது அதையே செய்ய திட்டமிட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.