பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மேற்கு தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் ராஜ்குமார் வெர்கா. இவர் கடந்த 2022இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பல்பீர் சிங் சித்து, குர்பிரீத் சிங் கங்கர், சுந்தர் ஷாம் அரோரா ஆகியோருடன் பாஜகவில் இணைந்தார். இதில் ராஜ்குமார் வெர்கா அமிர்தசரஸ் பகுதியின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வெள்ளியன்று தனது பதவியை ராஜினாமா செய்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக ராஜ்குமார் வெர்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “காங்கிரஸில் இருந்து விலகியதன் மூலம் தவறு செய்து விட்டேன். இந்த தவறை சரி செய்ய தில்லி செல்கிறேன். பாஜகவிடம் எந்த திட்டமும் இல்லை காங்கிரஸில் இருந்து விலகிய மேலும் பல தலைவர்களும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வருவார்கள்” என்று கூறினார்.