புதுதில்லி, ஜன. 12 - “நமது நாட்டில் அனைத்திற்கும் மேலா னது அரசியலமைப்புதானே தவிர நாடாளு மன்றம் அல்ல” என்று ஒன்றிய அரசின் முன் னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசுத் துணைத்தலைவ ரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர், “நாடாளுமன்றத்தின் இறை யாண்மையை நீதித்துறை மதிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இந்நிலையில், தன் கருக்கு பதிலளிக்கும் விதமாகவே ப. சிதம் பரம் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பே உயர் நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிய மனத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால், கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டே தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை (National Judicial Appointments Commission - NJAC) ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. ஆனால், இது நீதித் துறை யின் சுதந்திரத்தை சமரசம் செய்யும் வகை யில் இருந்ததால், அச்சட்டத்தை உச்ச நீதி மன்றம் ரத்து செய்துவிட்டது. அத்துடன், எப்போதும் போல கொலீஜியம் மூலமே நீதிபதிகளை பரிந்துரைத்து வருகிறது.
இவ்விஷயத்தில் சமீப காலமாகவே, ஒன்றிய பாஜக அரசு, உச்ச நீதிமன்றத்து டன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரு கிறது. “கொலீஜியம் முறை திருப்திகரமாக இல்லை என நாட்டு மக்கள் கருதுகின்றனர்; அரசமைப்புச் சட்டக் கூறுகளின்படி, நீதிபதிகளை நியமிப்பது அரசின் பணியே ஆகும். உலகம் முழுவதும் அரசுதான் நீதிபதிகளை நியமித்து வருகிறது” என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கொலீஜியம் அமைப்புக்கு ஒரு முடிவு கட்டும் வகையில், “நீதிபதிகள் நியமனங் களுக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதிபதிகளின் காலியிடங்கள் மற்றும் நியமனங்கள் இப்படியே தொடரும்” என்றும் கூறியிருந்தார். கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரும், “முறையான சட்டப்பூர்வ அரசியலமைப்பு உத்தரவை நீதித்துறை ரத்து செய்தது ஜனநாயக வரலாற்றில் இதுவரை நடந்திராத சம்பவம்” என்றார். மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மறுநாளே இவ்வாறு தன்கர் பேசியது, விவாதத்தைக் கிளப்பியது.
இந்நிலையில், புதன்கிழமையன்று மீண்டும் நீதித்துறையை தன்கர் விமர்சித்தார். “இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் திருத்துவதற்கு நாடாளு மன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும், அரசியலமைப்பின் அடிப்படை கட்ட மைப்பை மாற்றவோ அல்லது அழிக்கவோ இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடி யாது” என்று கடந்த 1973-ஆம் ஆண்டு, கேச வானந்த பாரதி வழக்கில் உச்ச நீதி மன்றம் வரலாற்றுத் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பையும் அவர் கேள்விக்கு உட்படுத்தி இருந்தார். “இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரண மாக அமைந்துள்ளது. அரசியலமைப்பை திருத்தும் நாடாளுமன்றத்தின் அதி காரத்தை யாரேனும் கேள்வி எழுப்பி னால், நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என் சொல்வது கடினமாக போய்விடும்” என்று புலம்பியிருந்தார். மேலும், “இந்த தீர்ப்பை நான் ஆதரிக்க மாட்டேன். அடிப் படை கட்டமைப்பை திருத்த முடியாது என்ற தீர்ப்பு, நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப் படும் பல அரசியலமைப்பு திருத்தங்களை ரத்து செய்வதற்கான அடிப்படையாகி விடு கிறது. ஜனநாயகம் உயிர்வாழ்விற்கு நாடாளுமன்ற இறையாண்மை மற்றும் சுயாட்சி ஆகியவை இன்றியமையாதது. நிர்வாகத்துறையும் நீதித்துறையும் இதில் சமரசம் செய்வதை அனுமதிக்க முடியாது” என்றும் பலவாறாக புலம்பியிருந்தார். நாடா ளுமன்றமே மேலானது என்றும் கூறி யிருந்தார்.
இந்நிலையில், ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப. சிதம்பரம் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில், “அனைத்திற்கும் மேலானது நாடாளுமன்றம் என குடியரசுத் துணைத் தலைவர் கூறி இருப்பது தவறானது. அர சியலமைப்புச் சட்டம்தான் அனைத்திற்கும் மேலானது. அடிப்படை கட்டமைப்பு என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கை கள் மீது பெரும்பான்மையினரால் நடத்தப் படும் தாக்குதலை தடுப்பதற்காக உருவாக்க ப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தற்போது இருக்கும் நாடாளு மன்ற முறைக்குப் பதிலாக குடியரசுத் தலை வர் முறைக்கு ஆதரவாகவோ, மாநிலங் களுக்கு இருக்கும் சட்டமியற்றும் தனி அதி காரத்தை வழங்கும் சட்டம் ரத்து செய்யப் படுவதாகவோ நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை ஆதரவுடன் சட்டம் இயற்றப்படு மானால் அது செல்லுபடியாகுமா? உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதி களை நியமிப்பதற்கான தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டத்தை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்ததை தன்கர் விமர்சித்திருக்கிறார். அந்த மசோதா தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு வேறொரு புதிய மசோதாவைக் கொண்டு வரும் அதி காரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளதே? அதை யார் தடுத்தார்கள்?” என்றும் அடுக்கடுக் கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.