புதுதில்லி, பிப்.15- நுகர்வுப்பொருட்கள் விலை குறியீட்டெண் (Consumer Price Index - CPI)அடிப்படையிலான சில்லரை விலைப் பண வீக்கம், 2023 ஜனவரியில், முந்தைய 3 மாதங்களில் இல் லாத அளவிற்கு உயர்ந்துள் ளது. கடந்த 2022 டிசம்பரில் 5.72 சதவிகிதமாக இருந்த சில்லரை விலைப் பணவீக் கம், 2023 ஜனவரியில் 6.52 சதவிகிதமாக அதிகரித்துள் ளது. பணவீக்கம் உச்சத்திலி ருந்த கடந்த 2022 ஜனவரி யில் கூட சில்லரை விலைப் பணவீக்கம் 6.01 சதவிகிதம் என்ற அளவிலேயே இருந் தது. ஆனால், 2023 ஜனவரி யில் 6.52 சதவிகிதத்தை எட்டி யுள்ளது. சில்லரைப் பணவீக்கம் இதற்கு முன்பு அதிகபட்ச மாக 2022 அக்டோபர் மாதத் தில் 6.77 சதவிகிதமாக இருந் தது. நவம்பர் - டிசம்பர் மாதங்களில் காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட உண வுப் பொருள்களின் விலை தொடர்ச்சியாகக் குறைந்த தையடுத்து, சில்லரை விலைப் பணவீக்கமும் குறைந்தது. டிசம்பரில் 5.72 சதவிகிதத்திற்கு வந்தது. ஆனால், 2023 ஜனவரியில் 6.52 சதவிகிதமாகி உள்ளது. 2022 ஏப்ரல் துவங்கி 2023 மார்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின், ஒட்டுமொத்த சில்லரை விலைப் பணவீக் கம் 6.5 சதவிகிதமாக இருக் கும் என ரிசர்வ் வங்கி கணித் துள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது.
தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றமே, 2023 ஜன வரியில் சில்லரை விலை அடிப்படையிலான பணவீக் கம் அதிகரிக்கக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதாவது உணவுப் பொருள் பணவீக்கமும் இந்தக் காலத் தில் அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களுக் கான பணவீக்கம் 2022 டிசம் பர் மாதத்தில் 4.19 சதவிகித மாக இருந்தது. இது 2023 ஜனவரியில் 5.94 சதவிகித மாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வே ஜனவரி மாதத்துக் கான சில்லறை பணவீக்கம் அதிகரிப்புக்கு காரணமாகி யுள்ளது. மேலும், இந்த உண வுப் பொருள் பணவீக்கமா னது கிராமப்புறங்களில் 6.85 சதவிகிதமாகவும், நகரங்க ளில் 6 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்கள் தவிர்த்து, கடந்த 2022-ஆம் ஆண்டில் சில்லரை விலைப் பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அதிகபட்ச அளவான 6 சதவிகிதத் தைத் தாண்டியே இருந்துள் ளது. சில்லரை விலைப் பண வீக்கத்தை அதிகபட்சம் 6 சதவிகிதம், குறைந்தபட்சம் 2 சதவிகிதம் என்ற வகையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்தி ருப்பது ரிசர்வ் வங்கியின் கடமை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த அடிப்படையி லேயே, அண்மையில் பண வீக்கத்துக்கு காரணமான விலை உயர்வைக் கட்டுப் படுத்த வங்கிகளுக்கு வழங் கப்படும் குறுகிய கால கடன் களுக்கான வட்டி விகித்தை (Repo Rate) ரிசர்வ் வங்கி கடந்த வாரம் 6.5 சதவிகித மாக உயர்த்தியது. எனினும், ஒன்றிய அரசு சரியான கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத் தாத வரை, ரிசர்வ் வங்கி எவ்வளவு முயன்றாலும் பண வீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாது என் பது குறிப்பிடத்தக்கது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 57,527 கோடி டாலராக சரிவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 57 ஆயிரத்து 527 கோடி டால ராக சரிந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு அக் டோபர் மாதத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையி ருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது. ஆனால், உலக ளாவிய பொருளாதார நெருக் கடிக்கு இடையே ரூபாய் மதிப்பை பாதுகாக்க வேண்டியுள்ளது என்று கூறி, ரிசர்வ் வங்கி இந்தக் கையி ருப்பைப் பயன்படுத்திக் கொண்டதால், அந்நிய செலா வணி கையிருப்பு குறையத் தொடங்கியது. இந்நிலையில்தான், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி யுடன் முடிவடைந்த வாரத் தில், நாட்டின் அந்நியச் செலா வணி கையிருப்பு 149.4 கோடி டாலர் சரிந்து 57,526.7 கோடி டாலராக உள்ளது. இதன் மூலம், கடந்த மூன்று வார மாக அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்பட்டு வந்த அதிகரிப்பு முடிவுக்கு வந் தது. அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்க மான அந்நிய நாணயச் சொத்துக்கள் 132.3 கோடி டாலர் குறைந்து 50,769.5 கோடி டாலராக குறைந்துள் ளது. பல வாரங்களாக உயர்ந்து வந்த நாட்டின் தங் கம் கையிருப்பும், இதே காலத்தில் 24.6 கோடி டாலர் குறைந்து 4,378.1 கோடி டால ராகியுள்ளது.