பிரபல பெண் பத்திரிகையாளரான கேரளாவை சேர்ந்த செளமியா விஸ்வநாதன் கடந்த 2008 செப்., 30 அன்று தில்லி நெல்சன் மண்டேலா மார்க்கில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25 ஆகும். இந்த கொலை வழக்கில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லி உயர்நீதிமன்றம் புதனன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமார், அஜய் சேத்தி ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என்றும், குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. செளமியா விஸ்வநாதன் “இந்தியா டுடே” பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.