states

img

மனிதாபிமான உதவிகளை தடை செய்வது சரியல்ல!

மோடி அரசு மீது ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ அமைப்பு அதிருப்தி

புதுதில்லி, ஜன.3- வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் (FCRA) தொண்டு நிறுவனங்களின் அங்கீகா ரத்தை புதுப்பிக்க ஒன்றிய அரசு மறுப்பது, மனிதாபிமான உதவி கள், சமூகப் பணிகள் நடைபெறு வதைத் தடுக்கும் செயலாகும் என்று ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ அமைப்பு கூறியுள்ளது. தொண்டு நிறுவனங்கள், வெளி நாட்டு நன்கொடைகளைப் பெறு வதற்கு, எப்சிஆர்ஏ எனப்படும் வெளி நாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Foreign Contribution Regulation Act - FCRA) கீழ், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி யை பெற்றாக வேண்டும். இந்நிலையில், வெள்ளிக் கிழமை வரை வெளிநாட்டு நிதி உதவி பெறும் உரிமத்தைப் பெற்ற என்ஜிஓக்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 762 ஆக இருந்தது. எனி னும், டிசம்பர் 31-ஆம் தேதியுடன் உரி மத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக் காததால், அந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 829 ஆகக் குறைந்து விட்டது.

அதாவது 5,933 நிறுவனங்களின் செயல்பாடு முடக் கப்பட்டுள்ளது. இதில் ஆக்ஸ்பாம் இந்தியா, தில்லி ஐஐடி, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ சங்கம், இந்திய மருத்துவக் கவுன்சில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், இமானுவேல் மருத்துவக் கூட்ட மைப்பு, இந்திய காசநோய் கூட்ட மைப்பு, விஸ்வ தர்மயாதன், மகரிஷி ஆயுர்வேதா பரிஸ்தன், தேசிய மீன வர் கூட்டமைப்பு, ஹம்தார்டு கல்விச் சமூகம், தில்லி ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் சொசைட்டி, பாரதிய சம்ஸ் கிருதி பிரிஷத், டிஏவி கல்லூரி அறக் கட்டளை மற்றும் மேலாண்மை, இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம், கோத்ரேஜ் நினைவு அறக்கட் டளை, தி தில்லி பப்ளிக் ஸ்கூல் சொசைட்டி, ஜேஎன்யு நியூக்ளியர் சயின்ஸ் சென்டர்,

இந்திய ஹேபி டென்ட் சென்டர், மகளிர் ஸ்ரீராம் கல் லூரி, டெல்லி பொறியியல் கல்லூரி, அனைத்து இந்திய மார்வாரி யுவ மஞ்ச் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். முன்னதாக, வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான சட்ட விதி களை முறையாகப் பின்பற்ற வில்லை என்று கூறி, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று, அன்னை தெரசா மிஷனரி ஆப் சேரிட்டியின் விண்ணப்பத்தையும் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொண்டு நிறுவ னங்களை முடக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை குறித்து ‘ஆக்ஸ்பாம் இந்தியா’வின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஒன்றிய அரசின் இந்த முடிவு பாதிக்கப்படக்கூடிய மக்க ளுக்கு சேவை செய்வதற்கான, தொண்டு அமைப்புகளின் உறுதிப் பாட்டைக் குறைத்து விடாது. ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசின் ‘மதிப்பை’ நிலை நிறுத்தாது. இந்தப் பிரச்சனை தொடர் பாக உள்துறை அமைச்சகத்தை அணுகுவோம். இந்த நெருக்கடி யான நேரத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்குத் தேவையான உதவி களைச் செய்வதற்கு நிதிக் கட்டுப் பாடுகளை நீக்குமாறு அரசை வலி யுறுத்துவோம்” என்று தெரிவித்துள் ளார். “

ஆக்ஸ்பாம் இந்தியா, அரசு, மக்கள் சமூகம் மற்றும் தன்னார்வ லர்களுடன் இணைந்து பொது நலனுக்காக செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவலின்போது சுகா தாரத் துறை, மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுடன் கைகோர்த்து பணியாற்றியது. கொரோனா காரணமாக பள்ளிக் கல்வியில் கற்றல் இடைவெளியைக் குறைப்பதை உறுதி செய்வதற்காக இந்த அமைப்பு பல்வேறு மாநில  அரசுகளுடன் இணைந்து செயல் பட்டு வருகிறது.  மிஷன் சஞ்சீவனி திட்டத்தின் கீழ், ஆறு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளை ஆக்ஸ்பாம் இந்தியா வழங்கியுள்ளது.

16 மாநிலங்களுக்கு 13 ஆயிரத்து 388 உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களையும் வழங்கியுள்ளது. ஒன்பது மாநிலங்க ளில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆஷா ஊழியர்களுக்கு பயிற்சி அளித்ததோடு பாதுகாப்பு உப கரணங்களையும் வழங்கியுள்ளது. 5.76 லட்சத்திற்கும் அதிகமான மக்க ளுக்கு உணவு வழங்கப்பட்டது; தொற்றுநோய் காலத்தில் 10 ஆயி ரத்திற்கும் அதிகமானோருக்கு சுமார் ரூ. 3.53 கோடி நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை யொட்டி, தன்னார்வ தொண்டு நிறு வனங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவை அமைப்புகள் ஆற்றிய பணி யை உச்சநீதிமன்றம் பாராட்டியது” என்பதையும் பெஹர் சுட்டிக்காட்டி யுள்ளார்.