states

img

இறந்தவர் பெயரில் கோவாவில் மதுபான விடுதி நடத்திய ஸ்மிருதி இரானி மகள் ஸோய்ஸ் இரானி!

பனாஜி, ஜூலை 23 - ஒன்றிய பாஜக அரசில், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானியின் மகள், கோவா-வில் முறைகேடான வகையில், இறந்தவர் பெயரில் ரெஸ்டாரண்ட் வெளி நாட்டு மதுபான விடுதி நடத்தி வந்தது அம்பலமாகி இருக்கிறது. மேலும், கோவாவில் இயங்குவ தற்கான உரிமமே இல்லாத நிலையில், கலால் துறை அதிகாரிகள் மூலமாக விதி களை வளைத்து வெளிநாட்டு மது மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மது வகைகளை, ஸ்மிருதி இரானியின் மகள் விற்பனை செய்து வந்த தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி யின் மகள் ஸோய்ஸ் இரானி. இவர் கோவா வில் உள்ள அஸ்ஸாகவோ பகுதியில் ‘சில்லி சோல்ஸ் கபே’ என்ற பெயரில் ரெஸ்டாரண்ட்டையும், அதனுடன் வெளி நாட்டுத் தயாரிப்பு மதுபானங்களை விற்கும் சொகுசு மதுபான விடுதியையும் நடத்தி வருகிறார். 

இந்த மதுபான விடுதியின் உரிமம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த ஜூன் 22-ஆம் தேதி உரிமத்தை புதுப்பிப்பதற்காக அந்தோணி காமா என்ற பெயரில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. கலால் துறை அதிகாரிகளும் இந்த விண்ணப்பத்தை ஏற்று, மதுபான விடுதி - ரெஸ்டாரண்ட்டுக்கான உரிமத்தைப் புதுப்பித்து வழங்கியுள்ளனர். இதற்கிடையேதான், மதுபான விடுதி உரிமதாரரான அந்தோணி காமா கடந்த 2021 மே 17-ஆம் தேதியே உயிரிழந்து விட்டார் என்றும், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானியோ, உயிரிழந்தவரின் பெயரில் உரிமம் பெற்று இந்த மதுபான விடுதி மற்றும் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. ஏரிஸ் ரோட்ரிகஸ் என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற விவரங்கள் மூலம் இந்த உண்மை களை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

மேலும்,ரெஸ்டாரண்ட் நடத்துவ தற்கான ஆவணங்கள் திரிக்கப்பட்டு போலியான ஆவணங்கள் மூலம் உரிமம் பெறப்பட்டுள்ளதாக கூறி கோவா கலால்துறை ஆணையர் நாராயணன் எம் காட்டிடம் புகாரும் அளித்துள்ளார்.  “சுங்கவரித்துறை அதிகாரிகள் மற்றும் அஸ்ஸாகோ பஞ்சாயத்து அதிகாரிகள் உதவியுடன், ஒன்றிய அமைச்சர் குடும் பம் செய்துள்ள இந்த முறைகேடு மீது விரிவான விசாரணை நடத்த வேண்டும்” என்றும் வழக்கறிஞர் ஏரிஸ் ரோட்ரிகஸ் அந்த புகாரில் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஆளும் கோவா பாஜக அரசின் கலால் துறை, வேறு வழி யின்றி, ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானி நடத்தும் ‘சில்லி சோல்ஸ் கபே’ ரெஸ்டாரண்ட் மற்றும் மதுபான விடுதிக்கு, கடந்த வியாழக்கிழ மையன்று (ஜூலை 21) ‘விளக்கம் கேட்டு’ (Show Cause Notice) நோட்டீஸ்  அனுப்பியுள்ளது. மேலும் இந்த விவகாரம் ஜூலை 29-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.  உரிமம் பெற்றுள்ள பெயரான அந்தோணி காமா அவரது ஆதார் அட்டையை டிசம்பர் 2020-இல் தான் பெற்றுள்ளார். இவர் மும்பையின் விலீ பார்லே பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் இறந்ததற்கானச் சான்றிதழை மும்பை மாநகராட்சி வழங்கியிருப்பது, ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானி மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியிருக்கிறது. உரிமம் அளித்த கலால் துறையும் இதில் சிக்கலில் மாட்டியிருக்கிறது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள கலால்துறை அலுவலகம், “உரிமம் புதுப்பிப்பதற்கானப் படிவத்தில், உயிரி ழந்தவர் சார்பில் வேறு ஒருவர் கையொப் பமிட்டு உள்ளதாகவும், அந்த நபர், தயவு செய்து இந்த உரிமத்தை 2022-2023 ஆண்டு க்கு புதுப்பியுங்கள். இந்த உரிமத்தை  ஆறு மாதங்களுக்குள் மாற்றிக்கொள் கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தி ருந்ததாகவும் ஒன்றுமே அறியாதவர்கள் போல அப்பாவித்தனமாக கூறியுள்ளது. ஆனால், “ஒன்றிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் நடத்தும் ‘சில்லி சோல்ஸ் கபே’ மற்றும் மதுபான விடுதி யில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு, கோவா வில் இயங்குவதற்கான உரிமமே கிடை யாது. கலால் துறை அதிகாரிகள் மூலம் விதிகளை வளைத்து வெளிநாட்டு மது மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் வெளிநாட்டு மது வகைகளை விற்பனை செய்ய உரிமம் வழங்கியுள்ள னர்” என்று மற்றுமொரு முறைகேட்டை யும் வெளிக்கொண்டு வந்துள்ளார். “சுங்க வரித்துறை விதிகளின் படி ஏற்கெனவே அங்கு இயங்கும் ரெஸ்டாரண்ட்டுக்கு மட்டுமே மதுபானம் விற்பதற்கும், மதுபான விடுதி நடத்தவும் உரிமம் வழங்க வேண்டும்” என்பதையும் ஏரிஸ் ரோட்ரிகஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் கோவாவில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “இது ஒரு தீவிரமான பிரச்சனை என்றும், ஸ்மிருதி இரானியின் குடும்பத்தி னர் மீது கடுமையான ஊழல் குற்றச் சாட்டுகள் இருப்பதாகவும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா வலியுறுத்தி யுள்ளார்.

“கோவா விதிகளின்படி, ஒரு உணவ கம் ஒரு பார் உரிமத்தை மட்டுமே பெற முடியும், ஆனால் இந்த உணவகத்திற்கு இரண்டு பார் உரிமங்கள் உள்ளன. இது ஸ்மிருதி இரானிக்குத் தெரியாமல் நடக்கிறதா, அவருடைய செல்வாக்கு இல்லாமல்தான் உரிமம் வழங்கப்பட்ட தா?” என்றும் பவன் கேரா கேள்வி எழுப்பி யுள்ளார். மேலும், தற்போது ஊடகங்களை உள்ளே வரவிடாமல் கோவாவில் உள்ள உணவகத்தைச் சுற்றி, தனியார் பாதுகாப்பு பவுன்சர்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் பவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார். அதேநேரம் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானியின் வழக்கறிஞர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது கட்சிக்காரர் ‘சில்லி சோல்ஸ் கபே’ என்ற உணவகத்தின் உரிமையாளராகவோ அல்லது நடத்துபவராகவோ இல்லை என்றும், எந்த அதிகாரியிடமிருந்தும் எந்த ஒரு ‘ஷோ காஸ்’ நோட்டீஸையும் ஸோய்ஸ் இரானி பெறவில்லை என்றும் ஒரே போடாக போட்டுள்ளார்.