states

img

லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அமலாக்கத் துறை சோதனை யை மேலும் தீவிரப் படுத்தியுள்ளது. இந்நிலையில், சட்ட விரோத பணப்பரி மாற்ற விவகாரத்தை கையாளும் அம லாக்கத்துறை அதி காரிகளே லஞ்சம் வாங்கிய சம்பவம்  ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறி யுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஏலச்சீட்டு மோசடி வழக்கு ஒன்றிலிருந்து விடு விப்பதற்காக சம்பந்தப்பட்ட நபர்களி டமிருந்து அமலாக்கத்துறை அதிகாரி கள் லஞ்சம் பெற்றபோது அவர்களை  கையும் களவுமாக கைது செய்திருக்கி றது அம்மாநில லஞ்ச ஒழிப்புத் துறை. கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கிஷோர் மீனா, பாபுலால் மீனா ஆகிய இருவரும் ஏலச்சீட்டு மோசடி வழக்கில், கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க ரூ.17 லட்சம்  பேரம் பேசி இறுதியில் 15 லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளனர். இருவரிடம் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை பறி முதல் செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை யினர், வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர்.