states

img

தில்லியில் பாஜக பணப்பட்டுவாடா

புதுதில்லி 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி மாநிலத்தில் பிப்ர வரி 5ஆம் தேதி ஒரே கட்ட மாக சட்டமன்ற தேர்தல் நடைபெ றும் என்றும், பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தது. ஆளும் ஆம் ஆத்மி, காங்கி ரஸ், பாஜக என தில்லியில் மும் முனை போட்டி நிலவுகிறது. மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 2 வேட்பா ளர்களுடன் களத்தில் குதித்துள் ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு சமாஜ் வாதி, சிவசேனா (உத்தவ்), திரி ணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளன. பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகளை பிரிக்கும் முனைப்பில் பகுஜன் சமாஜ், மஜ்லிஸ் கட்சிகளும் தில்லி தேர்தல் களத்தில் உள்ளன. இந்நிலையில், புதுதில்லி சட்டமன்ற தொகுதியில் பாஜக நேரடியாக பணப்பட்டுவாடா மேற் கொண்டு வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அர விந்த் கெஜ்ரிவால் புதுதில்லி தொ குதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் பிரத மர் மோடிக்கு நெருக்கமான பர்வேஷ் வர்மா போட்டியிடுகிறார். பர்வேஷ் வர்மா பாஜக குண்டர்க ளோடு புதுதில்லி தொகுதியில் பணப்பட்டுவாடா மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணையத் திடம் கெஜ்ரிவால் புகார் அளித்துள் ளார். இந்த புகார் தொடர்பாக பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.  தேர்தல் ஆணையத்தின் வேலையை முடக்கும் பாஜக புதுதில்லி தொகுதியில் பணப் பட்டுவாடா ஒரு பக்கம் இருந்தா லும், தங்களுக்கு நெருக்கமான தேர்தல் அதிகாரிகள் உதவியுடன் வாக்காளர்கள் நீக்கம், புதிய வாக் காளர்கள் சேர்த்தல் உள்ளிட்ட உள்ளடி வேலைகளை பாஜக தொ டர்ச்சியாக மேற்கொண்டு வரு கிறது. புதுதில்லி தொகுதியில் மட்டு மின்றி தில்லி மாநிலத்தின் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்கா ளர்கள் நீக்கம், சேர்த்தல் குளறுபடி வேலைகளை பாஜக செய்து வரு கிறது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி புகார் அளித்துள்ளது. இதனால் நீக்கப்பட்ட வாக்காளர்களை சேர்க் கவும், புதிய வாக்காளர்களை சேர்ப் பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆனால் தனக்கு ஆதரவான அதிகாரிகள் மூலம் அறி வுறுத்தல் சார்ந்த வழிகாட்டு நெறி முறைகளை பாஜக தடுக்கிறது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டி யுள்ளது.