மறைக்க முடியாமல் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்ற தேர்தல் பத்திரங்கள் பற்றிய உண்மைகள், பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் பாஜக செய்திருக்கிற உலக மகா ஊழல்கள் என்ற மாபெரும் பனிப்பாறை யின், வெளியில் தெரிந்த மிகச்சிறிய முனை என்றுதான் தோன்றச் செய்கின்றன. அந்த ஊழல்கள் இந்தியப் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் என்ப வை, சரிசெய்ய நீண்டகாலம் பிடிக்கிற கடுமை யான தீய விளைவுகளாக இருக்கின்றன. தேர்தல் பத்திரங்கள் என்பவை 2018இலிருந்துதான் நடைமுறையிலிருக்கிற நிலையில், பாஜகவின் ஊழல்கள் அப்போதிருந்துதான் தொடங்கினவா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், அதற்கு முன்பிருந்த தேர்தல் அறக்கட்டளை என்ற நடை முறையிலும் மிக அதிக நிதியை பாஜகதான் பெற்றிருக்கிறது என்பது, ஆட்சிக்கு வந்தவுட னேயே ‘ஆட்டைய’ போடுகிற வேலை தொடங்கி விட்டது என்பதைக் காட்டுகிறது. சரி, அதென்ன தேர்தல் அறக்கட்டளை?
தேர்தல் அறக்கட்டளையிலும் பாஜக கொள்ளை
தேர்தல் அறக்கட்டளை என்ற வடிவத்தை அப்போதைய அரசு 2013இல் கொண்டு வந்தா லும், முதல் தேர்தல் அறக்கட்டளை என்பது டாடா குழுமத்தால் 1996இலேயே தொடங்கப் பட்டுவிட்டது. அரசியல் கட்சிகளுக்கான நிதியை அளிக்கிற வேலை, தங்கள் நிறுவனங்களில் இடையூறு ஏற்படுத்துகிற ஒன்றாக இன்றி, அரசியல் கட்சிகள் முந்தைய தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம், தற்போது போட்டியிடுகிற இடங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நிதி வழங்கும் பணியைச் செய்ய, தனி அமைப்பாக அதனை டாடா குழுமம் உருவாக்கியது. அதை ப்போன்றே, தேர்தல் அறக்கட்டளை என்பதை, கம்பெனிகள் சட்டப்பிரிவு 25இன்படி, லாப நோக்கில்லாத நிறுவனமாகப் பதிவு செய்து, அதன்மூலம் நன்கொடை வழங்கலாம் என்ற நடைமுறையை அரசு 2013இல் கொண்டு வந்தது. தேர்தல் அறக்கட்டளை என்பதை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். வருமான வரிக் கணக்கு எண் இருக்கிற எவரும் அதற்கு நிதியளிக்கலாம். அதை எந்தெந்த கட்சிகளுக்கு அளிப்பது என்பதை அறக்கட்டளை முடிவு செய்து வழங்கும். திரட்டப்படுகிற நிதி தொகுப்பாக மாறி விடுவதால், குறிப்பிட்ட நிறுவனம், குறிப்பிட்ட கட்சிக்கு நிதியளித்தது என்ற குற்றச்சாட்டு எழாத, பகுதியளவுக்கு மறைமுகமான நடை முறையாக அந்த தேர்தல் அறக்கட்டளை இருந்தது. அப்படியான நடைமுறைக்கு பதிலாக முழுமையான மறைமுக நன்கொடை முறையாக தேர்தல் பத்திரங்கள் என்பதை பாஜக அரசு கொண்டு வந்தாலும், இன்றும் தொடர்கிற அந்தத் தேர்தல் அறக்கட்டளையிலும் மிக அதிக நிதியை பாஜகவே பெற்றிருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. 2022-23 ஓராண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக பெற்றி ருக்கிற நிதி என்பது, 2013-23 பத்தாண்டுகளில் காங்கிரஸ் பெற்ற நிதியைவிட அதிகம் என்பது, அறக்கட்டளை முறையிலும் பாஜக அடித்திருக்கிற கொள்ளையைக் காட்டுகிறது.
திருடுவதற்காக திருட்டுத்தனமாக..
.அறக்கட்டளை முறையிலிருந்த ஓரளவு வெளிப்படைத் தன்மைகூட, பாஜகவின் ஊழல் களுக்கு இடைஞ்சலாக இருந்ததால்தான் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. யார் நிதியளித்தார்கள், யாருக்கு நிதி யளித்தார்கள் என்ற எந்தத் தகவலுமே வெளியில் தெரியாதபடி, ‘திருட்டை மறைக்கச் சட்டம்’ என்பதாக, சரியாகச் சொன்னால், திருடுவது சரி, திருட்டைக் கண்டுபிடிப்பது தவறு என்பதாக, தேர்தல் பத்திரங்கள் நடைமுறை சட்டமாக்கப் பட்டது. திருட்டை நியாயப்படுத்துகிற சட்டத்தை நேர்வழியில் இயற்ற முடியுமா? குறுக்கு வழியில்தான் இயற்றப்பட்டது. 2017 பட்ஜெட்டு டன் சேர்த்து நிதி மசோதாவாக இது நிறை வேற்றப்பட்டது. நிதி மசோதாக்கள் என்பவை மாநிலங்களவையில் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லாதவை. மாநிலங்களவை கருத்து கள் மட்டும்தான் கூறலாம், அப்படிக் கூறப்பட்ட கருத்துகளும் குப்பையில் போடப்பட்டன. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 110(1)இன்படி, செலவுகள், வரிவிதிப்பு உள்ளிட்ட சிலவற்றை நிறைவேற்றும் மசோதாக்கள் மட்டுமே நிதி மசோதாக்களாக அனுமதிக்கப்படும். ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இன் பிரிவு 29சி, கம்பெனிகள் சட்டம் 2013இன் பிரிவு 182, அந்நிய நன்கொடைகள் சட்டம் 2010இன் பிரிவு 2(ஜே)(6) ஆகியவற்றைத் திருத்திய, எவ்விதத்தி லும் நிதி மசோதா என்று ஏற்க முடியாத இந்த மசோதாவை, நிதி மசோதா என்று நிறை வேற்றியதே சட்ட விரோதம். இதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் கண்டுகொள்ளப்படவேயில்லை. தேர்தல் பத்திரங்கள் வழியாக நிதி யளிப்பவர்கள் யார் என்று சொல்ல வேண்டிய தில்லை என்பது மட்டுமல்ல. யார் நிதியளிக்கலாம் என்பதையும் இந்தத் திருத்தங்கள் மாற்றின. ஒரு நிறுவனம், முந்தைய 3 ஆண்டுகளில் ஈட்டியுள்ள சராசரி லாபத்தில் மொத்தமாகவே 7.5 சதவீதம்தான், அரசியல் கட்சிகளுக்கு நிதி யளிக்கலாம் என்றிருந்த வரையறை நீக்கப் பட்டது. அதனால்தான், லாபமே ஈட்டாத, அதாவது நஷ்டத்தில் நடக்கிற நிறுவனங்கள்கூட நிதியளித் திருப்பது, இப்போதைய தேர்தல் பத்திர செய்தி களில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. லாபத்தி லிருந்து நிதியளிக்கலாம், லாபமே இல்லாத போது? அடுத்த ஆண்டு லாபம் வருமளவுக்கு தங்களுக்கு எதையாவது அரசு ஒதுக்கித் தரும் என்றால், அதற்குக் கைமாறாக, அதாவது லஞ்ச மாக ஆளுங்கட்சிக்கு நிதியளிக்கலாமே? அது தான் நடந்திருக்கிறது. ஆக, திருடுவது என்று முடிவெடுத்து, அதற்காக இயற்றப்பட்ட சட்டம் தான் இந்தத் தேர்தல் பத்திரம்.
வசூல் ராஜா
இந்திய நிறுவனங்களிடமிருந்து இப்படி நிதி பெற்றுக்கொண்டு, முறைகேடாக ஒதுக்கீடுகள், அனுமதிகள் போன்றவை அளிப்பதே நாட்டுக்கு நல்லதாக அமையாது. அப்படி இருக்க, அந்நிய நிறுவனங்களிடமிருந்து இவ்வாறு நன்கொடை என்ற பெயரில் வாங்கிக் கொண்டு அனுமதிப்பது, இன்னும் தீங்காக அல்லவா அமையும்? அதைத் தடுப்பதற்காகத்தான், வெளி நாடுகளிலிருந்து நிதி பெறுவதை ஒழுங்கு படுத்துகிற சட்டம் இருக்கிறது. ஆனால், பெரும் பான்மை முதலீட்டை அந்நியர்கள் கொண்டிருக் கிற நிறுவனங்களும் இந்திய நிறுவனங் களாகவே கருதப்படும் என்று சட்டத்திருத்தம் செய்தது. உதாரணமாக, ஃப்ளிப்கார்ட் நிறு வனத்தின் 80 சதவீதம் வால்மார்ட்டுக்குச் சொந்த மானது. அப்படியானால், ஃப்ளிப்கார்ட் யாரு டைய நலனுக்காகச் செயல்படும்? அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டின் நலனுக்காகத் தான் செயல்படும் என்பதாலேயே, அப்படி யான நிறுவனங்கள் அந்நிய நிறுவனங் களாகக் கருதப்பட்டு, அவர்களிடமிருந்து நிதி பெறுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன. நாய் விற்ற காசு குரைக்காது என்பதைப் போலத்தான், அந்நியர்களுக்கு இந்திய மக்களின் நலன்களை விற்றுக் கிடைக்கிற காசும் என்று சட்டத்தைத் திருத்தி வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது பாஜக. மொத்தத்தில் தேர்தல் அறக்கட்டளை, தேர்தல் பத்திரங்கள் என்று எந்த வழியாக இருந்தாலும் பாஜகதான் வசூல் ராஜாவாக இருந்திருக்கிறது. ‘நீ எந்த வார்டனா இருந்தா என்ன, வார்டன்னா அடிப்போம்’ என்ற திரைப்பட வசனம் மாதிரி இந்தியர்கள், அந்நியர்கள், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், கடத்தல் காரர்கள், கம்பெனிகள் என்று காசு யாரிட மிருந்தாலும் வசூல் செய்வோம் என்று வசூலித் திருக்கிறது பாஜக! அதற்காக அடகு வைக்கப் பட்ட இந்திய நாட்டின் நலன்கள் எவையெல்லாம் என்பது வெளிப்படும்போது, நாடு தாங்குமா என்று அச்சம் ஏற்படுகிறது!
- அறிவுக்கடல்