பெங்களூரு, ஏப்.12- கர்நாடக மாநிலத்தில், ஏபிவிபி, பஜ்ரங் தள், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட சங்-பரிவார் அமைப்புகள் இஸ்லா மியர்க்கு எதிராக வெறுப்புப் பிரச் சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள இந்து கோயில் களில் இஸ்லாமியர்கள் கடை வைக்க அனுமதிக்கக் கூடாது, மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது, முஸ்லிம் ஓட்டுநர்களின் டாக்சி, ஆட்டோக்களில் இந்துக்கள் ஏறக் கூடாது, ஹலால் இறைச்சியைப் புறக் கணிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, தார் வாட் மாவட்டத்திலுள்ள நுக்கேரி அனு மன் கோயில் முன்பு கடை வைத்தி ருந்த முஸ்லிம் முதியவரைத் தாக்கி, அவர் விற்பனைக்கு வைத்திருந்த தர்ப் பூசணி பழங்களையும் சாலையில் போட்டு உடைத்தனர். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது கர்நாடக முன்னாள் முதல்வ ரும், பாஜக மூத்த தலைவருமான எடி யூரப்பாவும் கொதித்து எழுந்துள் ளார். இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “முஸ்லிம்களை அமைதி யாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்” என்று ஆவேசப்பட்டுள் ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “கர்நாடகத்தில் மதப் பிரச்சனை களை ஏற்படுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது. முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள். இந்துக்களும் முஸ் லிம்களும் ஒரே தாய்க்கு பிறந்த சகோ தரர்கள். அவர்களுக்குள் ஒரு பந்தம் இருக்கிறது. சில குண்டர்கள் பிளவு களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவது சரியல்ல. இந்த விவகாரங்களை இத் துடன் நிறுத்த வேண்டும். அவர வர்கள் தங்களின் வேலையை கவ னிக்க வேண்டும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒற்று மையாக பணியாற்ற வேண்டும். இந்து - இஸ்லாம் பிணைப்பை உடைக்க முயற்சிகள் நடைபெற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை எனக்கு உறுதியளித்துள்ளார். அவ ரைச் சந்திக்கும்போது, இதுபோன்ற பிரிவினைவாத அரசியலுக்கு முற் றுப்புள்ளி வைத்து வளர்ச்சிப் பணி களில் கவனம் செலுத்த அறிவுறுத்து வேன்.” இவ்வாறு எடியூரப்பா கூறியுள் ளார்.