உ.பி. பாஜக எம்எல்ஏ ஆணவம்
லக்னோ, மார்ச் 23- உத்தரப் பிரதேசத்தில், தொடர்ந்து 2-ஆவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. எனினும் இம்முறை மிகக் குறைந்த வாக்குகள்- அதாவது, 100, 200, 500, ஆயிரம் என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்துள்ளது. இது பாஜகவினரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஹைதர்கர் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள தினேஷ் ராவத் பேட்டி ஒன்றை அளித் துள்ளார். அதில், “எங்களுடன் எப் போதும் உள்ளவர்கள் இந்த முறையும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதைப் போல் எங்களை எதிர்ப்போர் 2024 வரை தங்கள் எதிர்ப்பை தொடர்வார்கள். நான் எப்போ தும் எதிர்ப்பவர்களை மதிப்பது கிடையாது. எனவே, பாஜக வுக்கு வாக்களிக்காதவர்கள் எங்களிடம் எவ்வித உதவியை யும் நாடி வர வேண்டாம், நாங் கள் பாஜகவுக்கு வாக்களிக்கா தவர்களுக்கு உதவ மாட்டோம். வரும் 2024 மக்களவை தேர்த லில் மோடி பிரதமராகும் வரை காத்திருங்கள். அதுவரை நாங் கள் உங்களுக்கு உதவ மாட் டோம்” என தெரிவித்துள்ளார்.