states

நிர்வாக உத்தரவு மூலம் பணமதிப்பு நீக்கம் செய்ய ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளதா?

புதுதில்லி, அக்.12- “நிர்வாக உத்தரவு மூலம் ரூபாய் நோட்டு களை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அர சுக்கு இல்லை” என தொடரப்பட்ட வழக்கில்,  ரிசர்வ் வங்கியும், ஒன்றிய அரசும் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண் டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2016-ஆம் ஆண்டு 500 ரூபாய், 1000  ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதில், பின்பற்றப்பட்ட வழிமுறை கள் சரியானதுதானா?ரிசர்வ் வங்கிச் சட் டத்தின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்பதை ஆராய வேண்டியுள்ளது என்றும் அரசியல் சாசன அமர்வு குறிப்பிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில், அதுவரை புழக்கத்தில் இருந்த  500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் இனி  செல்லாது என திடீர் என அறிவித்தார்.  இதனால் நாடே துயரின் பிடியில் சிக்கியது. பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆனபிறகும் அதன் பாதிப்பு கள் முழுமையாக சீராகவில்லை. பணமதிப்பு நீக்கத்தின் போது, அந்த நட வடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசா ரித்த அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், “மக்களுக்கு ஏற் பட்டிருக்கும் இன்னல்கள் குறித்து கவலை தெரிவிக்கிறோம் என்றாலும் ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையில் நீதி மன்றம் தலையிட முடியாது” என்று கூறி விட்டார். பணமதிப்பு நீக்கத்திற்கு இடைக்  கால உத்தரவு பிறப்பிக்கவும் மறுத்து விட்டார். மேலும், நாட்டின் உயர் நீதிமன்றங்  கள் பலவற்றிலும் மொத்தம் 58 வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், அவற்றின் விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இதனிடையே, ஒன்றிய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் சட்ட மீறல்கள் உள்ளதாகவும், நிர்வாக உத்தரவு மூலம் கரன்சி நோட்டுகளை ரத்து செய்யும் அதி காரம் அரசுக்கு இல்லை என்றும், மனுதா ரர்கள் சுட்டிக்காட்டியதால், 58 வழக்குகளும் அரசியல் சாசன அமர்வுக்கு விசார ணைக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில், பணமதிப்பு நீக்க நட வடிக்கை தொடர்பான வழக்கு, நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பி.ஆர். கவை, ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன், பி.வி. நாகரத்னா ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இதுபோன்ற வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க தேவை யில்லை. தனிநபர்களின் பாதிப்புக்கு நிர்  வாக ரீதியாக தீர்வு காணலாம். உச்ச நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டிய தில்லை” என ஒன்றிய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞர் ஷியாம் திவான், அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை கள் குறித்து பேசும்போது, அதனை “நேர விரயம்” என ஒன்றிய அரசு குறிப்பிடுவது வியப்பளிக்கிறது என்றார்.

நீதிபதி நாகரத்னாவும், “அரசியல மைப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை கள் என குறிப்பிடப்படும்போது, அதற்கு பதி லளிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை யாகும்” என்றார். எனினும் சட்ட விதிமுறை கள் மீறப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினார். அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜ ராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ப. சிதம் பரம், ஆமாம் விதிகள் மீறப்பட்டுள்ளன என்றார். அதற்கு ஒன்றிய அரசின் அட்டர்னி  ஜெனரல் ஆர். வெங்கடரமணி, இந்த வழக்கு களில் அரசியல் தாக்கங்களே அதிகம் உள்ளன என்று கூறினார். ப. சிதம்பரம் வாதிடுகையில், “1978-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க  நடவடிக்கைக்கும், 2016-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவுக்கும் வேறுபாடு உள் ளது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 24 மற்றும் 26-இன் படி ஒன்றிய அரசு பணமதிப்பு நீக்கம் செய்ய முடியுமா என்ற சட்டச் சிக்கல் மிகவும் உயிருடன் உள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணப் படாவிட்டால், எதிர்காலத்தில் அரசாங்கம் அதையே மீண்டும் செய்யலாம்” என்றார்

மேலும், “ரூபாய் நோட்டுகளை முழு மையாக ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு அதி காரம் இல்லை. ஒரு குறிப்பிட்ட தொடரின் ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்ய மட்டுமே சட்டப் பிரிவு 26(2) ஒன்றிய அரசுக்கு அதி காரம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டார். இந்த இருதரப்பு விவாதங்களையும் கேட்ட அரசியல் சாசன அமர்வு, “பண மதிப்பு நீக்கத்திற்கான வழிமுறைகள் சரி யானதா? என்பது குறித்து விசாரிக்க வேண்  டியுள்ளது. பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்னதாக ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட் டங்கள் தொடர்பான ஆவணங்களையும் பார்க்க வேண்டியுள்ளது” என்று கூறியது டன், இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு  26(2)க்கு பதிலளிக்கும் வகையில் விரி வான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு இந்திய ஒன்றிய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் தற்போது உத்த ரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை யையும் நவம்பர் 9-ஆம் தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்திவைத்துள்ளது.