states

தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

புதுதில்லி,மார்ச் 16- கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மருத்துவ உயர்படிப்புகளில் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை நிரப்பிக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.  சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் தமி ழக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்து வா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த  2020 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பல்வேறு மருத்துவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறை யீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், ‘மாநில அரசு பிறப்பித்த அரசா ணைக்கு எந்த தடையும் கிடையாது’’ என கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து 2022 ஆம் ஆண்டு மருத்துவ கலந்தாய்வின் போது 50 சதவீத இடஒதுக்கீட்டை பயன்படுத்த தடை கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதற்கு தடை விதிக்க மறுத்ததோடு, இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தர விட்டு அது சார்ந்த மனுவையும் தள்ளு படி செய்தது.

இந்த விவகாரத்தில் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உட்பட  5 மருத்துவர்கள் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில்  விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ‘சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத  இடஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கு கிறோம். தமிழகத்தில் அரசு மருத்துவர் களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தந்த அரசாணையை இடைக்காலமாக செயல்படுத்த அனுமதி வழங்கப்படு கிறது. கடந்த ஆண்டை போல இந்த  ஆண்டும் மருத்துவ உயர்படிப்புகளில் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப் படுகிறது. தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம். 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பிரதான வழக்கு விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.