states

img

மதுரா மசூதியை அகற்றக்கோரும் மனு தள்ளுபடி

புதுதில்லி, ஜன. 5 - ஷாயி ஈத்கா மசூதியை அகற்றக் கோரி தொடரப் பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள ஷாயி  ஈத்கா மசூதியில் தொல்லி யல் ஆய்வு நடத்த உத்தர விட வேண்டும், அந்த இடம் கிருஷ்ணஜென்ம பூமியை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று அறிவிக்க வேண்டும், மசூதியை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் மஹெக் மஹே ஷ்வரி என்பவர் உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் வெள்ளியன்று விசார ணைக்கு வந்தது. அப்போது மஹெக் மஹேஷ்வரியின் மனுவை நீதிபதிகள் தள்ளு படி செய்தனர். இந்த விவ காரத்தில் ஏற்கெனவே பல்வேறு உரிமையியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பொதுநல வழக்கை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட் டுள்ளனர்.