states

img

உத்தர்கண்டை மிரட்டும் டெங்கு காய்ச்சல்

உத்தர்கண்ட் மாநிலத்தில் டெங்கு  காய்ச்சல் பரவல் மிக மோசமான  அளவில் உள்ளது. மழை வெள்ள பாதிப்பிற்கு பின் டெங்கு காய்ச்சல் தொடர்பாக முன் னெச்சரிக்கை நடவ டிக்கை மேற்கொள்  ளாமல் ஆளும் பாஜக அரசு அசால்ட்டாக இருந்ததால், மாநி லம் முழுவதும் மிக  குறுகிய காலத்தில் 600-க்கும் மேற்  பட்டோர் டெங்கு காய்ச்சலால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 70% பேர்  குழந்தைகள் ஆவர். ஹரித்வார், உத்  தம் சிங் நகர் மற்றும் டேராடூன் பகுதி களில் டெங்கு நோயாளிகளின் எண் ணிக்கை மிக அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவோருக்கு சிகிச்சை அளிக்க ரத்தம் தேவைப் படுவதால் பொது மக்கள் தாமாக முன் வந்து ரத்ததானம் செய்யுமாறு சுகாதார செயலாளர் டாக்டர். ஆர். ராஜேஷ் குமார்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.