states

img

நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், மார்ச் 11- விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கும் வாழ்வாதாரமாக இருந்து வரும் நெல் கொள்முதல் நிலையங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், நெல் கொள்முதல் நிலை யங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டை களை இயக்கமாக செயல்பட வேண்டும், நுகர்பொருள் வாணிப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் முன்பு நுகர் பொருள் வாணிப கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆயிரம் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நாகப்பட்டினம் மாவட்டம் மோக னூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயலாளர் என்.ராசப்பன், சிஐடியு நாகப்பட்டினம்  மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, மண்டலத் தலைவர் ப.தமிழரசன், மண்டல துணைத் தலைவர் என்.ஆனந்த்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

சங்கத்தின் மாநில பொதுச் செயலா ளர் ஆர்.புவனேஸ்வரன் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், ‘‘ஒவ்வொரு நெல்  கொள்முதல் நிலையங்களிலும் பல ஆயி ரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. அங்கு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலை செய்யும் சுமை பணி தொழிலாளர்க ளுக்கும், ஊழியர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே, அரசு ஒவ்வொரு நெல் கொள் முதல் நிலையங்களிலும் ஆயிரத்திற்கும் அதிகமான மூட்டைகள் இருப்பதால் உடனடியாக அதை நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து அப்புறப்படுத்தி இயக்கமாக செயல்பட வேண்டும்.  கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை 48 மணி நேரத்திற்குள் அனுப்ப வேண்டும் என்ற விதி மீறல் அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் நடை பெறுகிறது.  தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டை களை  அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்’’ என தெரிவித்தார்.