பிரிட்டன் அயலுறவுத் துறை செயலாளரும் ஆஸ்தி ரேலியா அயலுறவுத் துறை செயலாளரும் இணைந்து ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக ‘ஜன நாயக நாடுகள்’ செயல்பட அறிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பிரிட்டனில் ஜனநாயகம் படாத பாடு படுகிறது. சமீபத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சில மசோதாக்கள் மிகவும் ஆபத்தானவை. ஒரு மசோதா போலீசிற்கு வரைமுறையற்ற அதிகாரம் வழங்குவது குறித்தது. அரசை எதிர்த்து போராடுபவர்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவி விட இது உதவும். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓங்கிய குரலில் முழக்கங்களை எழுப்பக் கூடாது என்றெல்லாம் மசோதா கூறுகிறது. தேசிய குடிமகன் உரிமை குறித்த இன்னொரு மசோதா பல சர்ச்சைகளை கிளப்பக்கூடியது. இது நிற வெறிக்கு துணைபோகும் மசோதா என பல ஜனநாயக அமைப்பு கள் குரல் கொடுத்துள்ளன. கிரேட் பிரிட்டனில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் மசோதா எனவும் கூறுகிறார்கள். உள்துறை செயலாளர் எந்த முன்னறிவிப்புமின்றி ஒருவரது குடியுரிமையை ரத்து செய்ய முடியும். பிரிட்டன் கூட்டணி நாடுகளுடன் இணைந்து பல நாடுகளில் ஆக்கிர மிப்பு யுத்தங்களை நடத்துவதால் அந்த நாடுகளின் மக்கள் பிரிட்டன் உள்பட பல நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர். அவ்வாறு தஞ்சம் புகும் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்காது என்பதே மசோதாவின் விளைவு.