states

img

சிபிஎம் தலைவர்களுடன் தில்லி முதல்வர் சந்திப்பு

புதுதில்லி, மே 30- தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தங்கள் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங், ராகவ் சத்தா மற்றும் அதிஷி ஆகியோருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், எம்.ஏ. பேபி, பிருந்தா காரத், ஏ. விஜயராக வன் ஆகியோரை மே 30 செவ்வாய்க்கிழமை யன்று தில்லியில் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் சந்தித்தனர். தற்போது ஒன்றிய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள தில்லி மீதான அவசரச் சட்டத்திற்கு எதிராக கட்சியின் ஆதரவை அவர்கள் கோரினர்.