states

img

பாஜகவில் இணையுமாறு நிர்ப்பந்திக்கும் விசாரணை அமைப்புகள்

“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும்  ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப் பாளரும், தில்லி முதல்வருமான அர விந்த் கெஜ்ரிவாலை மதுபான கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அம லாக்கத்துறை மூலம் கைது செய்ய துடி யாய் துடித்து வரு கிறது மோடி அரசு.  பிப்.2 ஆம் தேதி  ஆஜராக வேண்  டிய அமலாக்கத் துறையின் 5- ஆவது சம்மனையும் கெஜ்ரிவால் புறக்கணித்த நிலையில், அவர் எந்த நேரத்திலும் கைது செய்  யப்படலாம் என அமலாக்கத்துறை மூலம் தகவல்  வெளியாகி வரும் நிலையில், மேலும் இந்த விவ காரம் தொடர்பாக அமலாக்கத்துறை நீதிமன்  றத்தை (தில்லி ரோஸ் அவென்யூ) அணுகியுள்ளது. பாஜகவில் மட்டும் இணையவே மாட்டேன் இந்நிலையில், பாஜகவில் சேரச் சொல்லி  விசாரணை அமைப்புகள் அழுத்தம் தருகிறார்  கள் என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டியுள் ளார். தில்லியில் நடைபெற்ற பள்ளி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆற்றிய உரையில்,”ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக எந்த சதியும் செய்ய முடியும். ஆனால்  நான் வளைந்து கொடுக்கப் போவதில்லை. என்னை விசாரணை அமைப்புகள் மூலம் பாஜகவில் சேரச்  சொல்கிறார்கள். அதன் பின்னர் அப்படியே என்னை காலி செய்ய வேண்டும் என்பதே அவர்கள் திட்  டம். என்ன ஆனாலும் சரி நான் பாஜகவில் மட்டும்  இணையவே மாட்டேன்” என அவர் கூறியுள்ளார்.

பாஜகவின் கைப்பாவையாக மாறிய தில்லி குற்றப்பரிவு

ஆம் ஆத்மி தலைவர்களின் வீட்டு வாசலிலேயே ‘குடியிருக்கும்’ அவலம்

கடந்த வாரம் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியில் ஆட்சியை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்எல்ஏ-களுக்கு பாஜக ரூ.25 கோடி  பேரம் பேசியதாக குற்றச்சாட்டினார். இந்தக்  குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பாஜக  தலைவர் வீரேந்திர சச்தேவா ஜன.30-ஆம்  தேதி தில்லி காவல் துறை தலைவரைச் சந் தித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு கோரினார். அடுத்த 2 நாட்களில் இந்த விவ காரம் தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு வெள்ளி யன்று தில்லி குற்றப்பிரிவு போலீசார் நோட்  டீஸ் அனுப்பிய நிலையில், தொடர்ந்து சனி யன்று ரூ. 25 கோடி பேரம் தொடர்பான  ஆதாரங்களை சேகரிக்க வந்ததாக முதல்  வர் அலுவலகம், கெஜ்ரிவால் வீட்டின் வாச லிலேயே நீண்ட நேரம் காத்திருந்தனர்.  குற்றப்பிரிவு போலீசாரை கெஜ்ரிவால் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பணி களை கவனித்தார். இதனால் மாலை நேரத்  தில் குற்றப்பிரிவு போலீசார் கெஜ்ரிவாலின் வீட்டை விட்டு வெளியேறினர். பெண் அமைச்சர் வீட்டு வாசலிலும் தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த  தலைவருமான அதிஷீயும் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை முன்வைத்து,”பாஜக தனது  தாமரை 2.0 ஆபரேஷனைத் தொடங்கி, ஜன நாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தில்லி ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க சதி செய்கின்றது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து தில்லி குற்றப்பிரிவு போலீசார் குழு ஞாயிறன்று அமைச்சர் அதிஷீயின் வீட்டுக்குச் சென்றனர். அவர் வீட்டில் இல்லை என்பது தெரியாமல் மதுரா  சாலையில் உள்ள அதிஷீயின் வீட்டு முன்பு  நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தனர்.  ஒன்றிய உள்துறை அமைச்சரின் நேரடி  கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லி காவல் துறை வெளிப்படையாக பாஜகவின் கைப் பாவையாக மாறி, பாஜக தலைவரின் புகா ருக்காக ஆம் ஆத்மி தலைவர்களின் வீட்டு  வாசலிலேயே குடியிருக்கும் அவலமான நிலை தில்லியில் அரங்கேறி வருகிறது.