states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஒன்றிய அரசின் 5-ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்  காக தில்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாய போராட்டத்தை 2 நாட்களுக்கு ஒத்தி வைத்திருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன..

9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை  படிக்கும் மாணவர்கள், புத்தகங்கள், கையேடு களை பார்த்து தேர்வு எழுதும் முறையை கொண்டு வர சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சோதனை முறையில் இந்த  முறையில் தேர்வு நடத்தப்பட உள்ளது என தக வல் வெளியாகியுள்ளது. ஒன்றிய கல்வித்துறை யின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சாட்ஜிபிடி என்பதன் இந்திய பதிப்பாக திட்ட மிடப்பட்டிருக்கும் “ஹனுமன்” மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

மேற்குவங்கத்தில் சீக்கிய போலீஸ் அதி காரியை காலிஸ்தானி எனக் குறிப்பிட்ட தற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆம்  ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வெளிநாடுகளில் உள்ள 14 தேர்வு மையங்களில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

ஆந்திராவில் வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்து இளைஞர்களுடன் வியாழ னன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். 

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரன் வெள்ளியன்று நடைபெறும் முதல் பட்ஜெட்  கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரிய மனு வை ராஞ்சி பிஎம்எல்ஏ நீதிமன்றம் நிராகரித்தது.

சிலிகுரி உயிரியல் பூங்காவில் அடைக்கப் பட்டுள்ள சீதா, அக்பர் என்ற இரு சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.