புதுதில்லி, ஜூலை 12- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப். அமைப்பு தனது சந்தாதாரர் களில் ஓய்வூதியம் பெறும் 73 லட்சம் பேருக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்கு வதற்கான நடவடிக்கை களை தீவிரப்படுத்தியுள்ளது. பி.எப் ஓய்வூதியத்தை மத்திய தொகுப்பு மூலம் ஒரே நேரத்தில் அனைத்து வாடிக் கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் வித மான நடவடிக்கை எடுக்க ஜூலை 29 மற்றும் 30-ம் தேதி களில் கூட்டம் நடைபெற உள் ளது. இக்கூட்டத்தில் இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. தற்போது 138 மண்டல பிஎப் அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகி றது. இவை மண்டல வாரி யாக வழங்கப்படுவதால் ஒவ் வொரு பகுதியில் இருப்பவர் களுக்கும் வெவ்வேறு நாட் களில் ஓய்வூதியம் கிடைக்கி றது.
தற்போது 138 மண்டல அலுவலகங்களில் பெறப் பட்ட தகவலின் அடிப்படை யில், 73 லட்சம் ஓய்வூதியதா ரர்களுக்கும் ஒரே நாளில் மத்திய தொகுப்பு மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத் தில் மத்திய தொகுப்பின் தக வல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு ஒப்பு தல் அளிக்கப்பட்டது. இதன் படி ஒரே நபரின் பெயரில் உள்ள பல்வேறு பிஎப் கணக்கு கள் ஒன்றிணைக்கப்படும். பணி மாறுதலுக்குரிய படி வங்களை விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இதேபோல 6 மாதத்துக் கும் குறைவாக ஓய்வூதிய பங்களிப்பை அளித்துள்ள சந்தாதாரர் அவரது கணக்கி லிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 6 மாதம் முதல் 10 ஆண்டு வரையான காலத் திற்கு சந்தா செலுத்தியவர் களுக்கு மட்டுமே இத்தகைய வசதி அளிக்கப்பட்டுள்ளது.