states

குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் குழு

புதுதில்லி, ஜூலை 31 - மணிப்பூர் சென்று திரும்பிய ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஜூலை 29, 30 ஆகிய தேதிக ளில் இரண்டு நாட்கள் மணிப்பூர் சென்ற ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள், அங்கு வன் முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டு இருக்கும் வெவ்வேறு நிவாரண முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த னர். அங்கிருக்கும் பெண்கள், முதிய வர்கள், குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியதுடன், பல்வேறு சமூகப் பிரதிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.  பின்னர் தாங்கள் நேரில் கண்ட விவரங்களை, மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கே-விடம் பகிர்ந்து கொண்ட அவர்கள், மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் தில்லி திரும்பியதும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், “கலவரம் ஏற்பட்டு சுமார் 3 மாதங்களாகியும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் பாஜக தலை மையிலான மணிப்பூர் அரசு இயந்தி ரம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியுள்ளது.

சுமார் 3 மாதங்க ளாக நீடிக்கும் இணையச் சேவைக் கான தடை, சமூகங்களுக்கு இடை யிலான அவநம்பிக்கையை அதிக ரிப்பதற்குத்தான் காரணமாகி இருக்கிறது. மணிப்பூரில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே கோப மும் விரோத உணர்வும் நிலவுகிறது. இந்த பிரச்சனைக்கு சிறிதும் தாமத மின்றி தீர்வு காணப்பட வேண்டும். இவ்வளவுக்குப் பிறகும், மணிப்பூர் வன்முறை குறித்து எதுவும் பேசாமல் மவுனம் சாதிப்பதில் பிரதமரின் முழு அலட்சியமே வெளிப்படுகிறது” என்று குற்றம் சாட்டினர். மணிப்பூரில் அமைதி - நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில், மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உடனடியாக மேற் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். திங்களன்று நாடாளுமன்ற வளா கத்தில், மல்லிகார்ஜூனகார்கே, சோ னியாகாந்தி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்களிடமும் மணிப்பூர் நிலவரங்களை விளக்கிக் கூறினர்.  இதன் அடுத்தகட்டமாக, குடியர சுத் தலைவர் திரௌபதி முர்மு-வையும் சந்திக்க ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். மணிப்பூர் நிலவரத்தை விளக்கி, முறையிடுவதற்கு குடியரசுத் தலை வரிடம் நேரம் கேட்டுள்ளதாக மல்லி கார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.