சில்க்யாரா, நவ. 25- உத்தரகண்ட் சுரங்கத்திற்குள் சிக்கி யுள்ள 41 தொழிலாளர்களை மீட்க மேலும் 2 நாட்கள் ஆகலாம் என தகவல் வெளியாகி யுள்ளன. தொழிலாளர்களை மீட்க பாறைகளை வேகமாக குடையும் அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மொத்தமுள்ள 60 மீட்டரில் 46 மீட்டர் அளவுக்கு ஆகர் குடைந்தது. அதுவரை உள்ளே உள்ள தொழிலாளர் களை வெளியே அழைத்து வர இரும்பு பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் 10 சதவீத துளையிடும் பணி (14 மீட்டர்) மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், வியாழனன்று இரவு திடீரென ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, இயந்திரம் பழுதடைந்து உள்ளே சிக்கிக் கொண்டது. இதனால் துளையிடுவது நிறுத்தப்பட்டது. மீதமுள்ள பகுதிகளை துளையிட வேண்டுமானால், உள்ளே சிக்கி உள்ள ஆகர் இயந்திரத்தை முத லில் வெளியே எடுக்க வேண்டும். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள இரும்பை வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஆகர் இயந்திரத்தை வெளியே எடுத்த பிறகு, துளையிடும் பகுதியை கை களால் துளையிட வேண்டும். இவ்வாறு கைகளால் துளையிடுவதால் இயந்தி ரத்தைக் கொண்டு துளையிடுவதை விட கூடுதலாக 18 முதல் 24 மணி நேரம் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாய்ப்பாக மேல் பகுதியில் இருந்து செங்குத் தாக புதிதாக துளையிடுவது. இதற்கான இயந்திரமும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை துளையிடும் பகுதியில் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு வாய்ப்புகளில் எந்த வாய்ப்பு முதலில் பயன்படுத்தப்படவுள்ளது என மீட்புப்படை உறுதியாக கூறவில்லை. இதனால் 41 தொழிலாளர்களை மீட்க மேலும் 2 நாட்கள் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.