states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தலித்துகள், மீதான அநீதி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான உரிமைகளை வழங்கி இந்திய அரசியலமைப்புச் சட்டம் பலம் கொடுத்தது. பாஜக ஆட்சியில், தலித் வகுப்பினரின் அரசியலமைப்புச் சட்டமோ, உரிமைகளோ மதிக்கப்படுவதில்லை.

2024-25 நிதியாண்டிற்கான ஜிடிபி வெறும் 6.4 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையின் யதார்த்தத்தை இனிமேல் பாஜக அரசால் மறுக்க முடியாது. நான்கு ஆண்டுகளில் இது மிகக் குறைவு.

வேந்தருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குவதன் மூலம் கூட்டாட்சி  குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகிறது. கல்வி என்பது மத்திய ஏகபோகத்திற்கான விஷயமல்ல. இந்த நடவடிக்கையானது மாநில சுயாட்சியை குலைக்கும் சங் பரிவார் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். 

சோர்வடைந்த முதல்வர், ஓய்வு பெற்ற அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, பீகார் இளைஞர்களின் நம்பிக்கையை ஏமாற்றமாக மாற்றியுள்ளார்.இவர்களின் ஆட்சியில், வறுமை, வேலையின்மை, ஊழல் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றில் பீகார் முதலிடத்தில் உள்ளது.

2024 இல் மின்சார வாகனங்களின் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது  2023 ஆம் ஆண்டை விட அதிகமாகும். 2023 இல் 82,688 மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில் 2024 இல் 99,165 மின்சார வாகனங்கள் விற்ப னையாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி கடந்த 2020 ஆகஸ்ட் 31 அன்று காலமானார். அவருக்கு நினைவிடம் அமைக்க தற்போது ஒன்றிய அரசு இடம் ஒதுக்கி உள்ளது. ராஜ்காட் வளாகத்தில் ஒரு பகுதியை இதற்காக  ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 டிசம்பர் மாதம் எரிபொருள் தேவை 2.1  சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. எரிபொருள் பயன்பாடு டிசம்பர் மாதத்தில் 20.67 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. டிசம்பரில் பெட்ரோல் 10.8 சத வீதமும், டீசல் 8.1 சதவீதமும் அதிகமாக விற்பனை யாகியுள்ளது. சமையல் எரிவாயு விற்பனை 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை விரிவுபடுத்த ரூ.25,700 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.இந்தியாவில் செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பத்தின் பரவல் சிறப்பாக உள்ளது. 2030 க்குள் இந்தியாவில் 1 கோடி பேருக்கு ஏஐ திறன் களை பயிற்றுவிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட னர்.  அவர்களை மீட்க 3 நாட்களாக மீட்புப்பணி நடைபெற்று வருகின்றது. ராணுவ நீர் மூழ்கி வீரர்கள் மீட்புக் குழு ஏற்கனவே 3 பேரின் உடல் மீட்டுள்ள நிலையில் நான்காவதாக புதனன்று ஒருவரது  உடலை மீட்டுள்ளது.மீதமுள்ள தொழிலாளர்களும் உயிர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ளனர்.