புதுதில்லி, ஆக.30-
முசாபர்நகரில் ஆசிரியையால் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட முஸ்லிம் மாணவரின் இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆகியோரடங்கிய தூதுக்குழுவினர் சென்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர் நகர் அருகேயுள்ள குப் பாபூர் (Khub Bapur) என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரால் கொடு மைப்படுத்தப்பட்ட மாணவரையும் அவருடைய பெற்றோர் இர்ஷாத் மற்றும் ரூபினா ஆகியோரையும் சிபிஎம் தூதுக்குழுவினர் சந்தித்தனர். அவர்கள் மிகவும் ஏழைகள். அவர் களின் இரு மகன்களும் சண்டிகரில் வேலை செய்துகொண்டிருக்கிறார் கள். அவர்களில் இளையவன் குடும்பத்தின் வறுமை காரணமாக படிப்பைக் கைவிட்டுவிட்டு தினக் கூலி வேலைக்குச் சென்றுகொண்டி ருக்கிறான். இவர்கள் இருவரும் தனது சகோதரன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பள்ளிக்குச் சென்று கொடுமைப்படுத்திய ஆசிரியையிடம் இது குறித்துக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய இழிவான செயல் குறித்து அவர் சிறிதும் வருத்தம் தெரிவித்திடவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக் குழுவினர் அக்குடு ம்பத்தினரிடம், தங்கள் ஆதரவும் ஒருமைப்பாடும் எப்போதும் தங்களுக்கு உண்டு என்று உறுதி அளித்ததுடன், இளைஞர்களின் கல்வி தொடர நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் கூறியுள்ள னர். மேற்படி பள்ளிக்கூடத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக சுபாஷினி அலி மற்றும் ஜான் பிரிட்டாஸ் ஆகியோரிடம் கூறப்பட்டிருக்கிறது.
மேற்படி ஆசிரியை கைது செய்யப் பட வேண்டும் என்று கோரினர். உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம் சட்டங்களை பாரபட்சமான முறையில் அமல்படுத்திக்கொண்டிருக்கிறது என்றும், இது மிகவும் துரதிர்ஷ்ட வசமாகும் என்றும் தூதுக்குழுவினர் தெரிவித்தனர். (ந.நி)