states

img

10 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை தொட்டது கச்சா எண்ணெய் விலை!

புதுதில்லி, ஜூன் 12- இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யின் விலை 10 ஆண்டுகளில் உச்சத்தை எட்டியுள்ளது.  இதனால் இந்தியாவில் பெட்ரோல் - டீசல்  விலைகள் உயரும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவை யை 90 சதவிகிதம் வெளிநாட்டு இறக்குமதி வாயி லாகப் பூர்த்தி செய்யும் நிலையில், இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் பேஸ்கட் விலை  கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அது தற்போது 10 வருட உச்ச விலை யான 121 டாலரை தொட்டு அதிர்ச்சியளித் துள்ளது. இந்திய பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 121.28 டாலராக உள்ளது. ஒன்றிய எண்ணெய் வளத்துறை அமைச்சகத்தின் பெட்ரோலியம் பிளானிங் மற்றும் அனாலிசிஸ் செல் அமைப்பின் தரவுகளை ஒப்பிடுகையில் இந்த 121.28 டாலர் விலை என்பது 2012-ஆம்  ஆண்டின் பிப்ரவரி - மார்ச் விலையாகும். அதா வது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை  தற்போது கச்சா எண்ணெய் விலை தொட்டுள் ளது. சனிக்கிழமையன்று சர்வதேச கச்சா எண்  ணெய் சந்தையில் அமெரிக்காவை மையமாகக் கொண்ட வடக்கு டெக்சாஸ் இடைநிலை (West  Texas Intermediate -WTI) கச்சா எண்ணெய் விலை 120.7 டாலர், பிரெண்ட் கச்சா எண்ணெய்  விலை 122.0 டாலர் என உயர்ந்துள்ளது

அமெரிக்காவின் பணவீக்கம் 40 ஆண்டு களில் இல்லாத உச்சத்தைத் தொட்டு உள்ள  வேளையில், அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி யின் வட்டி விகித உயர்வால் டாலர் ஆதிக்கம் அதி கரித்து ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரு கிறது. அதனுடன், கச்சா எண்ணெய் விலையும்  அதிகரித்துள்ளதால் இறக்குமதிக்கு கூடுதலான  பணத்தை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்  ளது. இது பெட்ரோல் - டீசல் விலையில் உயர்வை  ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. தற்போதைக்கு ரஷ்யாவின் தள்ளுபடி விலையிலான கச்சா எண்ணெய் இந்தியா வுக்குப் பெரிய அளவில் பலன் அளித்துக் கொண்டிருக்கிறது. இதன்காரணமாகவே சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தும் இந்தியா வில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து எவ்வித மான மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகத்தை மேம்படுத்தவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸூம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், சர்வதேச சந்தையில் அதிகரித்து  வரும் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவிலும் எதிரொலிக்கும் ஆபத்து இருப்பதாகவே சந்தை  வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.