மம்தாவின் இரட்டை வேடம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலச் செய லாளர் முகமது சலீம் கூறியதாவது:- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமது அரசு மீது சுமத்தப் பட்டுள்ள நிலக்கரி ஊழல், மாடு கடத்தல், தங்கம் கடத்தல் மோசடிகளை மூடி மறைப்பதற்காகவும் அரசு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதில் நடைபெற்ற ஊழலை மூடி மறைக்கவுமே “துர்கா பூஜை” விழாவை கையில் எடுத்துள் ளார். “துர்கா பூஜையின்” ஒளியில் தம்மை தூய்மையானவராகக் காட்டிக் கொள்ள முயல்கிறார். இந்த நாடகத்தை அவர் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டார். மம்தா பானர்ஜி தான் பிறக்கும் வரை அல்லது ஆட்சிக்கு வரும் வரை துர்கா பூஜையின் முக்கியத்துவம் யாருக்கும் தெரியாது என்பது போல் நடந்து கொள்கிறார். வேலைக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளை ஞர்கள். தங்களுக்கான வேலை வாய்ப்பு வெளிப்படைத் தன்மையாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். பொருளாதார நெருக்கடியை ஒவ்வொருவர் தலையிலும் ஏற்றி வைத்துள்ள மம்தா பானர்ஜி இந்தத் தருணத்தில் இப்படியொரு விழாவை நடத்தியுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒருமுறை “மம்தாவை “துர்கா என்று அழைத்தது. இன்று அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் “துர்கா” வேடத்தில் நடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.