புதுதில்லி, அக்.29- பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் தில்லியில், ஏ.கே.கோபாலன் பவனில், அக்டோபர் 28-29 தேதிகளில் நடந்தது. ஞாயிறு அன்று ஏ.கே.கோபாலன் பவன் முன்பு, பகல் 12 மணியளவில், காசா வில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று வலி யுறுத்தி மத்தியக் குழு உறுப் பினர்கள் பங்கேற்ற தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் - கேரள முதல்வர் பினராயி விஜயன், மாணிக்சர்க்கார், எம்.ஏ. பேபி, பிருந்தாகாரத், முக மது சலீம் முதலானவர்கள் உரையாற்றினார்கள். அப்போது பினராயி விஜயன் பாலஸ்தீன ஆத ரவு தீர்மானத்தை முன் மொழிந்து பேசியதாவது: இந்தியா, தன்னுடைய சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே, போராடி வரும் பாலஸ்தீன மக்களு க்கு ஒருமைப்பாடு தெரி வித்துத்தான் இதுநாள்வரை யிலும் இருந்து வந்தது. இப்போது ஐ.நா. பொது மன்றத்தின் தீர்மானத்திற்கு எதிராக, (புறக்கணிப்பு) என்ற பெயரில் இந்திய அரசு, அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு, இஸ்ரே லுக்கு ஆதரவளிப்பது நம க்கு அதிர்ச்சி அளித்திருக் கிறது. இன்றைய தினம் பாலஸ்தீன மக்களுக்கு எதி ராக இஸ்ரேல் இனப்படு கொலைகளை மேற் கொண்டிருப்பதைப் பார்த்து க்கொண்டிரு க்கிறோம்.
அப்பாவி மக்கள் கொல்லப் பட்டுக் கொண்டிருக் கிறார்கள். பெண்களும், குழந்தைகளும் கொல்லப் பட்டுக் கொண்டிருக் கிறார்கள். அக்டோபர் 27ஆம் தேதி கணக்கின்படி 7236 பேர் கொல்லப்பட்டி ருக்கிறார்கள். 18,967 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 14 லட்சம் பேர் தங்கள் இல்லங்களிலிருந்து விரட்டி யடிக்கப்பட்டிருக்கிறார்கள். காசாவில் மட்டும் 27,781 கட்டிடங்கள் தரைமட்ட மாக்கப்பட்டிருக்கின்றன.பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள அட்டூழி யங்களைக் கண்டித்துள்ள ஐ.நா.பொது மன்றம் மனி தாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களைக் காப்பாற்ற படைகளை அனுப்பவேண்டும் என்று நிறைவேற்றியுள்ள தீர்மா னத்தினை ஆதரிக்காமல் இந்தியா ஒதுங்கிக்கொண்டி ருக்கிறது. அமெரிக்காவுடன் கைகோர்த்துக்கொண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்திய அரசாங்கம் இருந்து வருகிறது. இதனை இந்தியாவில் உள்ள இடதுசாரிகளாகிய நாம் கண்டிக்கிறோம். இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இணைந்து கூட்டு அறிக்கை வெளி யிட்டுள்ளோம். இஸ்ரேலிய யூத இனவெறி ஆட்சியாளர் களால் தாக்குதலுக்கு ஆளா கியிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.(ந.நி.)