புதுதில்லி,மார்ச் 6- பொதுமக்கள் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. விலங்கியல் ஆர்வலர்களின் வலி யுறுத்தல் காரணமாக தெருக்களில் சுற்றித்திரி யும் நாய்களை உள்ளாட்சி அமைப்புக்கள் பிடித்துச் செல்வது அடியோடு நின்றுள்ள தாகவும் இதனால் மக்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதையொட்டி தில்லி உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது. பொது மக்கள் தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்ப தால் அவை பெருகி வருவதாகவும் இதனால் மக்களுக்கு ஆபத்து உண்டாகும் எனவும் வாதிடப்பட்டது. இதுகுறித்து தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “அனைத்து தெரு நாய்களுக்கும் உணவைப் பெற உரிமை உண்டு. இதைப் போல் பொதுமக்களுக்கு தெரு நாய்களுக்கு உணவளிக்கும் உரிமை உண்டு என்பதால் அதைத் தடைசெய்ய முடியாது. ஆனால் மக்கள் இந்த உரிமை யைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனத் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. இந்த மேல் முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் அனிருத்தா போஸ் அமர்வு விசாரணை செய்தது. இந்திய விலங்குகள் நல வாரியம் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரையில் பொதுமக்கள் தெருநாய் களுக்கு உணவளிக்கக் கூடாது என்று தடை விதித்தனர்.