புதுதில்லி, ஏப்.2- நீதித்துறையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் “வழக்கறிஞர்கள் குழு” ஒன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருப்பதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா எம்.பி., மற்றும் பொதுச் செயலாளர் சுரேந்தி ரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தேர்தல் பத்திரங்கள் என்ற பெய ரில் கார்ப்பரேட்டுகளுக்குக் கைமாறு செய்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்நிலையில், நீதித்துறையைப் பாது காக்கிறோம் என்ற பெயரில் முதலைக் கண்ணீர் வடித்து வழக்கறிஞர்கள் குழு ஒன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதி பதிக்கு சமீபத்தில் எழுதியுள்ள கடி தத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இந்தக் கடிதமானது அர சமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை யும், அரசமைப்புச்சட்ட உரிமைகளை யும், அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக வும், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாது காப்பதற்காகவும் போராடிக் கொண்டி ருக்கும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் பொறுப்புள்ள வழக்கறிஞர் களுக்கு எதிராகவும் நீதித்துறையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவதூறை அள்ளி வீசியிருக்கிறது. நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான அதிகாரம் ஆகியவை நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்ப டைக் கட்டமைப்பின் அங்கமாகவும், ஜனநாயகத்தின் முதுகெலும்பாகவும் திகழ்கின்றன. இப்போதைய ஆட்சி யாளர்கள் இதன்மீது நேரடியாகத் தாக்குதலைத் தொடுத்துள்ளார்கள். நீதித்துறையின் சுதந்திரம் உட்பட அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிராக மிகவும் நுட்ப மான முறையில் சூழ்ச்சித் திட்டங்களை ஏற்படுத்தியும், நேரடியாகவும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள். நீதிபதிகளைத் தேர்வு செய்வ தற்கான அதிகாரம் அரசாங்கத்திற்குத் தேவை என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறத்தொடங்கி இருக்கிறார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளை மாற்றுவதிலும் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டிருக்கிறது.
தலையிடும் விதத்தில் நீதிபதிகள் ஓய்வு பெற்றபின் அவர்களை உயர்பதவி களில் நியமனம் செய்திடும் வேலைகளி லும் மோடி அரசாங்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் ஒன்றிய அரசாங்கம், உச்ச நீதிமன்ற கொலிஜியம் முறை மூலமாக பல்வேறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாற்றல்கள் மற்றும் நிய மனங்கள் செய்திடுவதையும் அவ மதித்திடும் விதத்திலும், தங்களுக்கு வேண்டிய நபர்களை மட்டுமே தெரிவு செய்திடும் விதத்திலும் நடந்து வந்திருக்கிறது. இதேபோன்றே உயர்நீதிமன்றங்களின் கொலிஜியம் முறை அடிப்படையிலான நியமன ங்களுக்கும் நடந்தது. கொலிஜியம் வற்புறுத்தியும்கூட ஆட்சியாளர்கள் செவிசாய்த்திடவில்லை. கொலிஜியம் பரிந்துரை செய்திட்ட வேட்பாளர்களை நியமனம் செய்ய மறுத்தது. இவை அனைத்தும் நீதித்துறையின் சுதந்தி ரத்தைக் கடுமையாக மீறிய விஷயங்களாகும். இந்த விஷயங்கள் தொடர்பாக இந்த “வழக்கறிஞர்கள் குழு” வாயே திறக்கவில்லை. நீதித்துறையைக் காப்பாற்ற முன்வரவில்லை. இந்த வழக்கறிஞர்கள் குழு இப்போது வெளியாகியுள்ள தேர்தல் பத்திரம் சம்பந்தமான அதிமுக்கிய வழக்கிலும் கார்ப்பரேட் ஏகபோக முதலாளிகளுடன் இணைந்துநின்று, உச்சநீதிமன்றம் மேற்படி தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தாமாகவே கடிதம் எழுதி, அவரின் கடு மையான கண்டனத்திற்கு ஆளானது. இந்த “வழக்கறிஞர்கள் குழுவின்” அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நாட்டிலுள்ள அனைத்து வழக்க றிஞர்களின் பொதுவான கருத்து கிடையாது. நீதித்துறையை மீட்பதற்காக வந்திருக்கிறோம் என்று முகமூடி அணிந்து வந்து மக்களை ஏமாற்றும் முயற்சிகளேயாகும். இதன் முயற்சியை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. - தமிழில்: ச.வீரமணி