states

கொரோனா பாதிப்பு 1.41 லட்சத்தை தாண்டியது

புதுதில்லி, ஜன.8- இந்தியாவில் ஒமைக் ரான் வைரஸ் தொற்று பர வலுக்கு மத்தியில் கொரோ னா தாக்கம் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கில் அதி கரித்து வருகிறது. வியாழ னன்று 90 ஆயிரத்து 928 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் வெள்ளி யன்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 ஆக பதிவானது.  இந்த நிலையில் நாட்டில் சனிக்கிழமை புதிதாக 1,41,986 பேருக்கு கொரோ னா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இது நேற்றைய (வெள்ளிக்கிழமை) பாதிப்பை விட 21 சதவீதம் அதிகமாகும். (இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 40,925 பேர் பாதிப்பு க்கு ஆளாகி உள்ளனர்). கொரோனா தொற்றுப் பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 285 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,83, 463 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 40,895 பேர் டிஸ் சார்ஜ் செய்யப்பட்டனர். இத னால், குணமடைந்தவர் களின் மொத்த எண்ணிக்கை  3,44,12,740 ஆக உயர்ந்துள் ளது. ஒமைக்ரான் பாதிப்பு, சனிக் க்கிழமை மகாராஷ்டிரத்தில் 876, தில்லியில் 513, கர்நாட கத்தில் 333, இராஜஸ்தானில் 291, கேரளாவில் 284, குஜ ராத்தில் 204, தமிழ்நாட்டில் 121, ஹரியானாவில் 114, தெலுங்கானாவில் 123 என மூன்று இலக்கத்தில் உள்ளது.