states

ரிமோட் முறையில் வாக்களிக்கும் முறையை கொண்டுவரும் தேர்தல் ஆணையம்!

புதுதில்லி, டிச. 30 - தேர்தலில் வாக்களிப்போரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும் நிலையில், நவீன தொழில் நுட்ப யுகத்தில் புலம்பெயர்ந்தோர், இருக்கும் இடத்தில் இருந்தவாறே வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.  பல்வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்து வசிக்கும் மக்கள், தங்க ளது சொந்த மாநிலங்களில் நடை பெறும் தேர்தல்களின்போது வாக்க ளிப்பதற்கு வசதியாக இந்த புதிய நடைமுறையைக் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக கூறி யிருக்கும் தேர்தல் ஆணையம், இதற்காக ஆர்விஎம் எனப்படும் தொலைதூர மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை (Remote Electronic Voting Machine - RVM), பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. அதனை தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது தொடர்பான நட வடிக்கைகளிலும் தீவிரமாகி யுள்ளது. இதற்காக ஜனவரி 16  அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத் திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. “2019-ஆம் ஆண்டு நாடாளு மன்ற பொதுத்தேர்தலில் 67.4 சதவிகித வாக்குகள் மட்டுமே பதி வாகி இருந்தன. 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வில்லை.

இது கவலை அளிக்கும்  விஷயம் என தேர்தல் கமிஷன் கருது கிறது. இதனால், வாக்களிக்கும் உரி மையை சரிவர பயன்படுத்து வதற்கு ஏதுவாக தேர்தல் ஆணை யம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது. நாட்டுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தரவுகள் இல்லாத நிலையில்,  இருக்கிற தரவுகளை வைத்து ஆய்வு  செய்ததில், 85 சதவிகித புலம் பெயர்ந் தோர் உள்நாட்டில் பல்வேறு மாநிலங் களுக்கு பணி மற்றும் இதர கார ணங்களுக்காக சென்றிருப்பது தெரி யவந்துள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவுக்காக சொந்த மாநில ங்களுக்கு செல்லாமல் தற்போது இருக்கும் இடங்களில் வாக்களிக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உதவியாக இருக்கும். வாக்களிப்பில் ரகசியத்தன்மை காத்தல், வாக்குச்சாவடி முகவர் களுக்கான வசதிகள், ஆகியவை உறுதி செய்யப்படும்” என்று கூறி யிருக்கும் தேர்தல் ஆணையம், இந்த  ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்துக் கேட்கும் வகையில் ஜன வரி 16-ஆம் தேதி கூட்டம் ஒன்று க்கு ஏற்பாடு செய்துள்ளது. அங்கீ கரிக்கப்பட்ட 8 தேசியக் கட்சிகள்,  57 மாநில கட்சிகளுக்கு இதற்கான அழைப்பையும் தேர்தல் ஆணை யம் அனுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு, இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அரசியல் கட்சிகளுக்கு செயல் முறை விளக்கங்களை அளிப்பார்கள் என்று கூறியிருக்கும் ஆணையம், ரிமோட் மூலம் வாக்களிக்கும் வசதி குறித்து, அரசியல் கட்சிகள் ஜனவரி 31-க்குள் தங்களின் எழுத்துப் பூர்வ மான கருத்துகளையும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.  இந்த ரிமோட் வசதியை அறி முகப்படுத்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிமுறை கள் சட்டம், வாக்காளர்கள் பதிவு விதிமுறைகள் ஆகியவற்றில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் இந்த இயந்திரம் நடை முறைக்கு வந்தால், புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டி இருக்காது. வாக்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் இது புரட்சிகரமான மாற்றமாக இருக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரி வித்துள்ளார். ஒரு வாக்குச்சாவடியிலுள்ள ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி, அதிகபட்சம் 72 தொகுதிகளுக்கான வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Electronic Voting Machine -EVM)  மீதான சந்தேகங்களே இன்னும் தெளிவுபடுத்தப்படாத நிலையில், தொலைதூர மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், இந்திய  தேர்தல் அமைப்பில் நம்பகத்தன்மை யை மேலும் குறைமதிப்புக்கு உட்படுத்துவதாக அமைந்து விடும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரிமோட் முறையிலான வாக்களிப்பு இந்திய ஜனநாயகத்திற்கே ஆபத் தாக உருவெடுக்கலாம் என்ற  அச்சத்தையும் பலர் வெளியிட்டுள்ள னர்.