states

img

காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு கையெழுத்து

தில்லி, ஹரியானா, குஜராத், கோவா, சண்டிகர் ஆகிய 5 மாநிலங்களில் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி களுக்கு இடையேயான 4:3 என்ற விகி தத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வியாழனன்று நிறைவு பெற்றது. சனி யன்று 5 மாநிலங்களுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதுதொடர்பாக தில்லியில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக், ஆம் ஆத்மி கட்சி  சார்பில் தில்லி அமைச்சர்கள் சவுரப் பரத்  வாஜ், அதிஷி ஆகியோர் பங்கேற்று தொகுதி பங்கீடு விபரத்தை கையெழுத்து டன் வெளியிட்டனர். தொகுதி உடன்பாடு 7 தொகுதிகளை கொண்ட தில்லியில்  ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கி ரஸ் 3 தொகுதிகளிலும், 10 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி ஒரு தொகு தியிலும், 26 தொகுதிகளை கொண்ட  குஜராத்தில் காங்கிரஸ் 24 தொகுதிகளி லும், ஆம்ஆத்மி 2 தொகுதிகளிலும், 2 தொகுதிகளை கொண்ட கோவாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி தலா ஒரு தொகு திகளிலும், ஒரே ஒரு தொகுதியை கொண்ட சண்டிகர் யூனியன் பிரதேசத்  தில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடு கிறது. 13 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் பில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகள் ஒரு மனதாக முடிவெடுத்து அங்கு தனித்தனி யாக தேர்தலை சந்திக்க உள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.