states

இந்திய பார் கவுன்சில் தீர்மானத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்

புதுதில்லி, ஆக.3- மணிப்பூர் வன்முறை தொடர்பாக  இந்திய பார் கவுன்சில் நிறைவேற்றி யுள்ள தீர்மானத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது, அத்துடன் அந்த தீர்மானத்தை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும் என வலி யுறுத்தியுள்ளது. இது குறித்து சங்கத்தின் அகில இந்திய  தலைவர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா அகில இந்திய பொதுச்செயலாளர் சுரேந்தி ரநாத் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி  குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.  நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவ காரம் குறித்து பேசாமல் இருப்பது அரசியல்  அமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செய லாகும். மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டுவதில் பாஜக அரசின் தோல்வியை மூடி மறைக்க எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டும் செயல் வெட்கக்கேடானது மற்றும்  ஜனநாயகப்பூர்வமற்ற சர்வாதிகாரப் போக்காகும்.

கடந்த 3 மாதங்களாக வன்முறைகளா லும், கொலைகளாலும் மணிப்பூர் எரிந்து  கொண்டிருக்கிறது.சுமார் 60,000 மக்கள்  தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளி யேற்றப்பட்டுள்ளனர், இதனால் அவர் களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் சீரழிந்துள்ளது. மேலும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வீடு கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இன வன்முறைக்கு வகுப்புவாத சாயம் பூசும் திட்டமிடப்பட்ட முயற்சி நடக்கிறது. ஏரா ளமான தேவாலயங்களும் கோவில்களும் குறிவைத்து தீவைக்கப்படுகின்றன.  பெண்கள் தாக்கப்படுவதும், நிர்வா ணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்  லப்படுவதும், பாலியல் வல்லுறவு செய்யப்  பட்டு கொலை செய்யப்படுவதும் அரங் கேறுகிறது. அரசு நிர்வாகம் முற்றிலுமாக தோல்வி யை சந்தித்துள்ளது.பாதுகாப்பிற்காக சுமார் 60,000 வீரர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர்.ஆனால் அரசு இயந்தி ரத்தின் சிதைவாலும் அமைதியை ஏற் படுத்துவதில் ஒன்றிய அரசின் எதிர்மறை நிலைப்பாடு காரணமாகவும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. 2 மாதங்களுக்கு மேலாக அமல்படுத் தப்பட்டுள்ள இணையதள தடையால் உண்மையான தகவல்களை மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. மாறாக  போலித் தகவல்கள் மூலமாக கல வரங்கள் மேலும் தீவிரமாகிறது. அரசி யல் சட்டத்தின்படியான சட்டத்தின் ஆட்சி  முற்றியிலும் சீர்குலைந்து விட்டது. இது  மக்களின் வாழ்வுரிமை மீது ஏவப்பட்டுள்ள பெரும் வன்முறையாகும்.

ஆனால் இன்னும் பிரதமர் மோடி மவு னத்தை கடைப்பிடித்துக் கொண்டிருக்கி றார். பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்  வலமாக இழுத்து சென்று பாலியல் வன்  கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்ப லமான பிறகு அரசியலமைப்பின்படி இத்த கைய கொடுமையை சகித்துக்கொண்டி ருக்க முடியாது என உச்சநீதிமன்றமே தெரி வித்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் மணிப்பூர் குறித்து இந்திய  மக்களிடம் பேசுவதற்கோ நாடாளுமன்றத் தில் அறிக்கை சமர்ப்பிக்கவோ இந்திய பிரதமர் தயாராக இல்லை.  மணிப்பூர் மக்களின் உயிர் மற்றும்  உடைமைகளைப் பாதுகாப்பதிலும், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டி இயல்புநிலையை கொண்டுவருவதிலும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தோல்வி  குறித்தும் மாநில நிர்வாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்தது குறித்தும் இந்திய பார் கவுன்சில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது.  அரசின் தோல்வியை மறைப்பதற்கு பதிலாக அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி  மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் வழக்கறிஞர்கள் மற்றும் இந்திய பார்  கவுன்சில் அக்கறை காட்ட வேண்டும். கவுன்  சில் தீர்மானமும் அதில் கூறப்பட்டுள்ள வித மும் மிக மோசமானது மற்றும் கண்டிக்கத்  தக்கது. இது அவர்களின் அதிகாரவரம் பிற்கு அப்பாற்பட்டது எனவே இந்திய பார்  கவுன்சிலின் தீர்மானத்தை அகில இந்திய  வழக்கறிஞர் சங்கம் எதிர்க்கிறது; கண்டிக்கி றது. மேலும் அந்த தீர்மானத்தை திரும்ப  பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.