ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்ச ரும், பாஜக மூத்த தலைவரு மான பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷி. இவர் பாஜக கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன் னாள் எம்எல்ஏவான தேவானந்த் பூல் சிங் சவுகானின் மனைவி சுனிதா சவுகானுக்கு பெங்களூரு (கர்நாடகா) மக்களவை தொகுதியில் சீட் வாங்கித் தருவதாக ரூ.2 கோடி பெற்றுள்ளார். ஆனால் சுனிதா சவுகானுக்கு பாஜக சீட் வழங்கவில்லை. இதனையடுத்து சுனிதா சவுகான் பசவேஸ்வர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில்,”ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷி பெங்களூரு மக்களவை தொகு தியில் சீட் வாங்கித் தருவதாக ரூ.2 கோடி பெற்றார். ஆனால் சொன்னபடி சீட் வாங்கித் தரவில்லை. பணத்தைத் திரும்பக் கேட்டபோது தன்னையும், தன் மகனையும் குண்டர்கள் தாக்கினர். மேலும் சாதி ரீதியிலாக அவதூறாக பேசினர்” என அதில் கூறப்பட்டுள்ளது. பாஜக அமைச்சருக்கு எதிராக போராட்டம் இந்நிலையில், சுனிதா சவுகானின் புகாரை ஏற்றுக்கொண்ட பசவேஸ்வர் நகர் போலீசார் கோபால் ஜோஷி மற்றும் அவரது மகன் அஜய் ஜோஷி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள் ளனர். அதனால் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் நடை பெற்று வருகிறது.