states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா விமான  நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்கு வரத்து இயக்குநரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பலமுறை அழைத்தும் ஆம்புலன்ஸ் வராத தால் குடும்பத்தினர் நோயாளியை காய்கறி வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அவலமான சம்பவம் பாஜக ஆளும்  உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் அரங்கேறி யுள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் செவ்வாயன்று காலை 4.2 ரிக்டர் அளவிலும், மீண்டும் மதிய  நேரத்தில் 4.5 அளவில் என அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ரேவ் பார்ட்டிகளுக்கு பாம்பு விஷம் வழங்கிய  வழக்கில், யூடியூபரும், சர்ச்சைக்குரிய தொடரான  பிக்பாஸ் 2 வெற்றியாளருமான எல்விஷ் யாதவுக்கு  நொய்டா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல்  கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன்  மோசடி செய்தது தொடர்பான பணமோசடி  வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.  அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை  எதிர்த்து நரேஷ் கோயல் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய மாவட்ட மான அலிகர் மாவட்டத்தின் பெயரை “ஹரிகர்” என மாற்றம் செய்ய நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜாமீன் மூலம் சிறையில் இருந்து வெளிவந்த ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு செவ்வா யன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் கண் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்தியாவுக்கு வெளியே முதல் ஐஐடி நிறு வனமாக தான்சானியாவின் சான்சிபாரில்  தனது வளாக உயர்கல்வி நிலையத்தை அமைத் துள்ளது ஐஐடி சென்னை. வெளிநாடுகளில் காலடி வைக்க ஐஐடி தில்லி, ஐஐடி காரக்பூர் ஆகியவை தயா ராகி வந்த நிலையில் ஐஐடி சென்னை முந்தி யுள்ளது.

பீகாரில் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாழ்வதாகவும், மாத சம்பளமாக வெறும் ரூ. 6,000 மட்டுமே பெறுவதாகவும் மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகள் மூலம் தகவல் வெளி யாகியுள்ளது.

தில்லியை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத், மீரட், ஹாபூர் உள்ளிட்ட  9 நகரங்கள் கடும் காற்று மாசுபாட்டில் (400 அள வில்) சிக்கியுள்ளன. இந்த காற்று மாசுபாடு அடுத்த  48 மணிநேரத்தில் எந்த நிலைக்கு வேண்டுமா னாலும் மாறலாம் என உத்தரப்பிரதேச வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.