states

img

பெய்ஜிங்கில் சீன – ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு

பெய்ஜிங், பிப்.5- சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் கும், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினும் பிப்ரவரி 4ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பில் ஜிஜின்பிங் கூறுகையில்2014ஆம் ஆண்டு அழைப்பை ஏற்று ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம் பிக்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டபோது,  8 ஆண்டுகளுக்குப் பிற்கு பெய் ஜிங்கில் சந்திப்போம் என்று  எதிர்பார்ப்பு தெரிவித்தனர். இப் போது, உங்களின் வருகை, பெய்ஜிங் சந்திப்பு என்ற  நமது எதிர் பார்ப்பை நிறைவேற்றியுள்ளது.  உங்களுடனும் வேறு நாடுக ளின் விருந்தினர்களுடனும் இணைந்து பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை வரவேற்று, ஒலிம் பிக் குறிக்கோளைச் செயல் படுத்துவோம்.  வசந்தகாலத்தில் இந்த சந்திப்பு, சீன –ரஷ்ய உறவுக்கு மேலதிக உயிராற்ற லை கொண்டு வருவது உறுதி என்று நம்பிக்கை கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

சீனாவும் ரஷ்யாவும் இணை ந்து செயல்பட்டு, இரு தரப்புறவு நிலைப்புத்தன்மையுடன் முன் னேறிச் சென்று வருகிறது.  ரஷ்யாவுடன் இணைந்து சீனா,  இரு நாடுகளிடையேயான விரிவான பயனுள்ள ஒத்து ழைப்புகளை மேலதிக சாத னைப் பெறச் செய்ய வேண்டும் என்று ஜிஜின்பிங் வலியுறுத்தி னார். புடின் சந்திப்பில் பேசுகை யில்,அழைப்பை ஏற்று பெய் ஜிங் குளிர்கால  ஒலிம்பிக்கின் துவக்க விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இரு தரப்புகளிடையேயான ஒலிம்பிக் பயணமானது,  இரு நாட்டு தலைவர்களின் நெருங் கிய உறவின் வெளிப்பாடாகவும் சிறந்த பாரம்பரியமாகவும் விளங்குகிறது.  சீன மக்கள், சிறந்த ஏற்பாடுகளுடன், உல கிற்கு மிக உயர் நிலை ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை வழங்குவது உறுதி என்று நம்புகிறேன்.  ரஷ்யா மற்றும் சீனாவின் விளையாட்டு வீரர்கள், போட்டி களில் தலைசிறந்த சாதனை களை படைப்பார்கள் என்று எதிர் பார்க்கிறேன் என்று கூறினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு, புதிய யுகத்துக்கான சர்வதேச உறவு மற்றும் உலகின் நிலை யான வளர்ச்சி பற்றிய சீனா  மற்றும் ரஷ்யாவின் கூட்ட றிக்கையை இரு தரப்பும் வெளி யிட்டுள்ளன.