states

இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

புதுதில்லி,டிச.22-  இந்தியா மற்றும் சீன ராணுவ உயர் கமாண்டர் நிலையிலான அதிகாரி கள் பங்கேற்ற 17 ஆவது சுற்றுப் பேச்சு வார்த்தை டிசம்பர் 20 அன்று சுசுல் - மால்டோ எல்லைப் பகுதியில்  நடை பெற்றது. இக்கூட்டத்தில், மேற்குப் பகுதியின் எல்லைக்கோட்டில் நிலவும் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருதரப்பினரும் கருத்து களைப் பரிமாறிக்கொண்டனர். மேற்கு பகுதியில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது என்று இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். ராணுவம் மற்றும் தூதரக நிலையில், இருதரப்பும் தொடர்ந்து பேச்சுகளில் ஈடுபடுவது என ஒப்புக்கொள்ளப்பட்டது என்று ஒன்றிய அரசின் செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.