states

‘நீட்’டுக்கு விலக்கு அளியுங்கள்!

குடியரசுத் தலைவரிடம் கடிதம் அளித்து முதல்வர் ஸ்டாலின் முறையீடு

இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக சென்னை வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெள்ளியன்று பிற்பகல் தில்லிக்குப் புறப்பட்டார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் முர்மு-வை, சென்னை விமான நிலையத்தில் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கடிதம் வழங்கி வலியுறுத்தினார். குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:

தேசிய தகுதி மற்றும் நுழைவுத்  தேர்வு (NEET) அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்ப தைக் கருத்தில் கொண்டு, தமிழ்  நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவப் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை நடை பெற்றது. இந்தச் செயல்முறை கடந்த காலங்களில் மாநிலத்தில் நல்ல பலன்களை அளித்தது.  ஆனால், ஒன்றிய அரசு நீட்  தேர்வை அறிமுகப்படுத்தியதா லும், அதைத் தொடர்ந்து மத்திய சட்டங்களில் செய்யப்பட்ட பல் வேறு மாற்றங்கள் காரணமாகவும், பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடைபெற்ற சேர்க்கை முறை நிறுத்  தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. நீட் ஏற்படுத்தும் பாதிப்பால் விலக்கு கேட்டு தீர்மானம் நீட் தேர்வினால் ஏற்படும்  பாதிப்புகளை ஆராய்ந்து, மாற்று வழிகளைச் செயல்படுத்துவது தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான  குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், பல்வேறு விவா தங்கள் நடத்தப்பட்டும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021  அன்று ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை சட்ட முன்வடிவு, 2021’ (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/ 2021) நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்கு 18.9.2021 அன்று அனுப்பப்பட்டது.  ஆளுநர் ஐந்து மாத காலத்துக்  குப் பிறகு, மேற்படி சட்டமுன்வடி வினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்குத் திருப்பியனுப் பிய நிலையில், 8.2.2022 அன்று  தமிழக சட்டமன்றத்தில் மீண்டும்

 இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற் றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவேண்டி ஆளு நருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்டமுன்வடிவை கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு பின்னர், மேற்படி சட்டமுன் வடிவு தமிழக ஆளுநரால் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.  இந்தச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய உயர்கல்வித் துறை,  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்க ளும், மத்திய உள்துறை அமைச்ச கத்துக்கு உரிய காலத்துக்குள் வழங்கப்பட்டுள்ளது.  இவ்வாறு தமிழக அரசின் சார்பில் போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட பிறகும் இந்த விஷ யத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், குடியரசுத் தலை வருக்கு, 14-8-2023 அன்று கடிதம் எழுதியிருந்தேன். பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்தச் சட்டமுன் வடிவுக்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது. இந்தச் சூழ்நிலையில், நீட்  விலக்கு தொடர்பான சட்டமுன் வடிவுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதி வாய்ந்த மாணவர்களின் மருத்  துவ சேர்க்கையைப் பறித்துள் ளது. தமிழகத்தில் பரந்த சட்ட மன்ற, அரசியல் மற்றும் சமூக ஒரு மித்த கருத்தின் நோக்கத்தைச் செயல்படுத்திட இயலாமல் முடக்கி யுள்ளது. இந்த உணர்வுப்பூர்வ மான பிரச்சனையில் உடனடி யாகத் தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரை வில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.