உலகிலேயே மிகப்பெரிய பெண்கள் அதிகாரமளிக்கும் இயக்கமாக குடும்பஸ்ரீ உருவெடுத்துள்ளதாகவும், புதிய கேரளத்தை பெண்கள் நட்புறவாக மாற்ற அரசு விரும்புவதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
மகளிருடன் புதிய கேரளம் என் கிற நோக்கத்துடன் பெண்களுடன் உரையாடும் புதிய கேரளம் மக ளிர் அரங்கம் நெடும்பாச்சேரி சியால் மாநாட்டு மையத்தில் புத னன்று (பிப்.22) தொடங்கியது. மக ளிர் அரங்கத்துக்கு பெண்கள் மற் றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமை வகித்தார். பார்வையா ளர்களில் பெண்களின் பெரும் பங்கேற்பு இருந்தது. பெண்களுக்கு பாதுகாப்பான வேலைவாய்ப்பை உறுதி செய்வ தில் கேரளம் முதலிடம் வகிக்கி றது. பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்பு றுத்தல் புகார்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும், இல்லை யெனில் அது நீதி மறுக்கப்பட்ட செயலாகும் என்றார் முதல்வர். அமைச்சர்கள் பி.ராஜீவ், ஆர். பிந்து, ஜே.சிஞ்சுராணி, அன்வர் சதாத் எம்.எல்.ஏ., மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் டாக்டர். ஷர்மிளா மேரி ஜோசப், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் ஹரிதா வி குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். புதிய கேரளம் செயல் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர். டி.என்.சீமா நடுவராக செயல்பட் டார். பி.கே.ஸ்ரீமதி, மெர்சிகுட்டி யம்மா, ஐஸ்வர்யா லட்சுமி, திவ்யா கோபிநாத், மெர்சிக்குட்டன், ஷைனி வில்சன், பி.கே.மேதினி, நிலம்பூர் ஆயிஷா, டெஸ்ஸி தாமஸ், இம்தியாஸ் பேகம், நிஷா ஜோஸ் கே.மணி, எம்.டி.வத்சம்மா, விஜயராகவ மல்லிகா, டாக்டர். நிகழ்ச்சியில் லிசி ஆபிரகாம், கே.சி.லேகா, கே.அஜிதா என பல் வேறு துறைகளைச் சேர்ந்த பெண் கள் பங்கேற்றனர்.