states

img

நிலவின் தென் துருவத்தில் களமிறங்கிய சந்திரயான் - 3

நிலவின் தென் துருவத்தில் களமிறங்கிய சந்திரயான் - 3இன் பிரக்யான் ரோவரின் டயர்கள் மூலம் இந்திய தேசிய சின்னத்தின் முத்திரை நிலவில் பதிந்ததாக புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. நிலவில் கொடி நட்டதே கடந்த கால நிகழ்வாக இருந்த நிலையில், ஒருநாட்டின் சின்னம் பதிவாகும்படி ஏற்பாடு செய்து இருப்பது சிறப்பு சாதனை அம்சமாக சமூக வலைத்தளங்களில் பாராட்டை பெற்ற நிலையில், நிலவின் மேற்பரப்பில் ரோவர் மூலம் பதிந்திருக்கும் முத்திரை படங்கள் உண்மையானது அல்ல எனவும், இஸ்ரோ பகிர்ந்து கொள்ளவில்லை என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து லக்னோவைச் சேர்ந்த விண்வெளி ஆர்வலர் க்ரிஷன்ஷு கர்க் கூறியதாவது,”இந்த படத்தை அடோப் போட்டோஷாப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த போலியான புகைப்படம் இஸ்ரோவில் இருந்து வரவில்லை” என கூறினார்.